பாஜக 400 சீட் வென்றால் ஞானவாபி மசூதி உள்ள இடத்தில் விஸ்வநாதர் கோவில் கட்டப்படும்: அசாம் முதல்வர்
டெல்லி: பாஜக 400 இடங்களை வென்றால் ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் பாபா விஸ்வநாத் கோயில் கட்டப்படும் என அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. 4வது கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. தேர்தல் பிரச்சாரங்களின்போது பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மாற்றி மாற்றி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் லஷ்மி நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மல்ஹோத்ராவை ஆதரித்து பாஜகவை சேர்ந்த அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹிமந்த பிஸ்வா சர்மா பேசுகையில், “காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நாடாளுமன்றத்தில் காஷ்மீர் ஆக்கிரமிப்பு குறித்து எந்த ஒரு விவாதமும் வைக்கப்படவில்லை. ஒரு காஷ்மீர் இந்தியாவிலும் மற்றொன்று பாகிஸ்தானிலும் உள்ளது என்று எங்களிடம் கூறப்பட்டது.
தற்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒவ்வொரு நாளும் போராட்டம் நடந்து வருகிறது, மக்கள் தங்கள் கைகளில் இந்திய மூவர்ணக் கொடியைப் பிடித்து பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இனி அப்படி இருக்காது. பாஜக 400 இடங்களைப் பெற்றால் விரைவில் பிரதமர் மோடியின் தலைமையில் காஷ்மீர் நமது நாட்டின் ஒரு பகுதியாக மாறும்.” என்றார்.
மேலும் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை மாற்றி விடுவார்கள் என்ற காங்கிரஸின் குற்றச்சாட்டை நிராகரித்த ஹிமந்தா பிஸ்வா சர்மா, 400 இடங்கள் பாஜகவுக்கு கிடைத்தால் மதுரா மற்றும் வாரணாசியில் கோயில்களைக் கட்ட உதவும் என்றார்.
ஹிமந்த பிஸ்வா சர்மா பேசுகையில், “சச்சின் டெண்டுல்கரை ஏன் டபுள் செஞ்சுரி, ட்ரிபிள் செஞ்சுரி அடித்தார் என்று கேட்பீர்களா? 300 சீட்கள் இருந்தபோது ராமர் கோயில் கட்டினார் மோடி. இப்போது 400 இடங்கள் கிடைத்தால் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி உருவாகும். வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியை மாற்றுவோம். அங்கு பாபா விஸ்வநாதருக்கு ஒரு பெரிய கோவில். எழுப்புவோம். முகலாயர்களால் பரப்பப்பட்ட குழப்பத்தை நீக்குவோம்" என்று கூறியுள்ளார்.
-
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications