கியரை மாற்றும் "கதர் கட்சி".. பக்கா பிளானுடன் கோவா பறக்கும் பிரியங்கா.. பாஜகவிற்கு செக்..?
கோவாவில் நாளை முதல் பிரியங்கா காந்தி பிரச்சாரம் மேற்கொள்வார் என தெரிகிறது
டெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நாளை முதல் கோவாவில் பிரசாரத்தை தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சார பயணம் காங்கிரசுக்கு அசுர பலத்தை பெற்று தருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோவா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், உள்ளிட்ட மாநிலங்களில் இன்னும் 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.. இதற்காக அந்தந்த மாநில கட்சிகள் தீவிரமான களப்பணியில் இறங்கி வருகின்றன.
குறிப்பாக, இந்த தேர்தல்களில் வெற்றி பெற பாஜகவும், காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.. இதற்கான புது புது வியூகங்களையும் வகுத்து, பிரசாரத்தில் ஈடுபட்டும் வருகின்றன.

தெம்பு
அந்த வகையில் காங்கிரஸ் கூடுதலாகவே அக்கறை செலுத்தி வருகிறது.. ஆனால், தலைவரே இல்லாமல் ஒரு தேசிய கட்சி 3 வருஷமாக இயங்கி கொண்டிருப்பது காங்கிரஸ் தொண்டர்களை ஏற்கனவே சோர்வடைய வைத்துள்ளது.. கட்சிக்கு இது பலவீனமாகி கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் பாஜகவுக்கு தெம்பாகி கொண்டிருக்கிறது.. அதுமட்டுமல்லாமல், சமீப காலமாகவே கட்சி விலகல் ஆரம்பமாகி உள்ளது.. அக்கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை தங்கள் பக்கம் இழுக்க மம்தா ஒரு பக்கம் களமிறங்கி வருகிறார்.. இன்னொரு பக்கம் பாஜக முயன்று வருகிறது.

கட்சி விலகல்
ஏற்கனவே பஞ்சாப்பில் வலுவாக இருந்த காங்கிரஸ் மெல்ல மெல்ல தன்னுடைய செல்வாக்கையும் இழக்க ஆரம்பித்துவிட்டது.. முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங், அதிருப்தியில் இருந்தபோதே அவரை சரிக்கட்ட முயன்றும் முடியாமல் தோற்றது காங்கிரஸ் மேலிடம்.. அவர் கட்சியை விட்டு விலகிய பிறகு பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கியதுடன், பாஜகவுடன் இணைந்து செயல்படும் அளவுக்கு இன்று வந்துவிட்டார்..

காங்கிரஸ்
இப்படி பஞ்சாப்பை கண்ணெதிரே நழுவவிட்டதைபோலதான், கோவா காங்கிரஸிலும் சறுக்கல் நடந்து வருகிறது.. மம்தாவின் அதிரடிகள் கோவாவின் சீனியர்களை கவர்ந்தாலும், பாஜக அதை தட்டிப்பறிக்க முயலவே பிளான் போட்டு வருகிறது.. கடந்த 2017 தேர்தலில், அங்குள்ள மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17-ல் வெற்றி பெற்றது.. ஆனால் 13 தொகுதிகளில் வென்ற பாஜகவோ மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது... இதற்கு பிறகு, காங்கிரஸில் இருந்து பல எம்எல்ஏக்கள் மெல்ல மெல்ல விலகினர்.. அதில் பலர் பாஜகவிலும் இணைந்தனர்..

கோவா
அப்போதும் காங்கிரஸ் மேலிடம் அமைதியாகத்தான் வேடிக்கை பார்த்தது.. இப்போது தேர்தலுக்கு அந்த மாநிலம் தயாராகி வரும் சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்ததே மிக முக்கிய புள்ளிகள் விலக ஆரம்பித்துவிட்டனர்.. முதல்வரான லுாய்ஜின்ஹோ பலோரா, காங்கிரஸில் இருந்து விலகி மம்தா கட்சியில் இணைந்தார். அடுத்து, மாஜி முதல்வரான ரவி நாயக்கும் 2 நாட்களுக்கு முன்பு விலகினார்.. அத்துடன் தன்னுடைய எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.. இவர் எப்படியும் பாஜகவில்தான் இணைவார் என்று இப்போதே முணுமுணுக்கப்பட்டு வருகிறது. தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் இவர் இணைய போவதாக செய்திகளும் கசிந்து வருகின்றன.

பிரியங்கா காந்தி
இப்போது சிக்கல் என்னவென்றால், இவரது ராஜினாமாவை தொடர்ந்து, அம்மாநில சட்டசபையில் காங்கிரஸின் பலம் 3ஆக குறைந்துள்ளது காங்கிரசுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி களமிறங்குகிறார்.. கடந்த ஒரு வருட காலமாகவே உத்தர பிரதேசத்தில் களப்பணியை நேரடியாக இறங்கி கவனித்து வருகிறார் பிரியங்கா.. தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.. நாளை முதல் கோவாவில் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.. ஆனால் பாஜக எப்போதோ கோவாவில் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டது..

மம்தா பானர்ஜி
அதேபோல, அரவிந்த் கெஜ்ரிவாலும், மம்தா பானர்ஜியும், ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டனர்... பிரியங்கா காந்தி நாளை முதல் கோவாவில் பிரசாரத்தை தொடங்குகிறார்... மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அவர் பிரசாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.. கோவாவில் செல்வாக்கு சரிந்து வரும் நிலையில், அதிருப்தியாளர்கள் மாற்று கட்சிக்கு தாவி வரும் நிலையில், பிரியங்காவின் வருகை எந்த அளவுக்கு அம்மாநிலத்துக்கு பலம் சேர்க்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications