ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க.. புதிய வழிகளை யோசியுங்கள்.. பதுக்கினால் கடும் நடவடிக்கை.. மோடி பேச்சு
டெல்லி: இந்தியாவில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் தேவையை அதிகரிக்க புதிய வழிகளை ஆராயுமாறும் இன்று நடைபெற்ற உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது.
டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களிலும் ஆக்சிஜன் தேவைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பலர் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டம்
இந்நிலையில், அதிகரிக்கும் கொரோனா வழக்குகள் மருத்துவமனைகள் உள்ள ஆக்சிஜன் தட்டுப்பாடு ஆகியவை குறித்து விவாதிக்கப் பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அமைச்சரவை செயலாளர், பிரதமரின் முதன்மை செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆக்சிஜன் தேவை
இதில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது, விநியோகத்தை வேகப்படுத்துவது ஆகியவற்றில் விரைவாகச் செயல்பட வேண்டிய அவசியம் குறித்து மோடி பேசியதாகப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆக்சிஜன் தேவையை அதிகப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் பிரதமருக்கு விளக்கப்பட்டது.

162 புதிய ஆலைகள்
நாட்டில் தற்போது தினசரி ஆக்சிஜன் தேவை 3,300 மெட்ரிக் டன் வரை அதிகரித்துள்ளதாகவும் நிலைமை சமாளிக்கத் தொழிற்சாலைகள் ஆக்சிஜனை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நாடு முழுவதும் புதிதாக 162 ஆலைகளைச் செயல்படுத்தவும் விரைவில் அனுமதி அளிக்கவுள்ளதாகப் பிரதமரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பதுக்கினால் நடவடிக்கை
இதையடுத்து பேசிய பிரதமர் மோடி, பல்வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜன் விநியோகம் சீராக, தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார். ஆக்சிஜன் விநியோகத்தில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டால் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து சிக்கலைச் சரி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிக்க புதிய வழிகளை ஆராயுமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டனர். ஆக்சிஜனை பதுக்குபவர்கள் மீது மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications