இத கடைசியா பார்த்துக்கோங்க! ஸ்ட்ரா, பட்ஸ் போன்ற ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை
டெல்லி: நாடு முழுவதும் ஜூலை 1 ஆம் தேதி முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள், ஸ்ட்ராக்கள், ஸ்பூன்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என கடந்த மாதம் அறிவித்தது.
இது தொடர்பாக 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், கடை உரிமையாளர்கள், தெருக்கடையோர வியாபாரிகள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்த நிலையில் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் இந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் தடையை மீறி பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 100 மைக்ரானுக்கு குறைவான பிவிசி பேனர்கள், ஐஸ்கிரீம் குச்சிகள், குச்சி மிட்டாய் குச்சிகள், காது குடையும் குச்சிகள், கப்புகள், கொடிகள், வடிவமைப்பு தெர்மாக்கோல்கள் போன்றவை தடை செய்யப்படும்.
குறிப்பாக அட்டையில் வரும் 10 ரூபாய் குளிர்பானங்களில் இடம்பெற்று இருக்கும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் போன்றவற்றை தடை செய்யப்போவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து இருக்கிறது. இந்த தடை அமலுக்கு வருவதற்கு இன்னும் 17 நாட்களே மீதம் இருப்பதால் அதற்கான மாற்று ஏற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து இருக்கிறது.
இந்த கட்டுப்பாடு காரணமாக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் குளிர்பான நிறுவனங்களின் விலை உயர்த்தப்படலாம் என்றும், அல்லது அந்த குளிர்பானங்கள் விற்பனை நிறுத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications