தமிழகத்தில்தான் கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை குறைவு- ஒப்புதல் படிவத்தை ஏற்க தயக்கம்
டெல்லி: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை போட்டவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கான ஒப்புதல் படிவத்தில் பலரும் கையெழுத்திட தயங்குவதுதான் காரணம் எனவும் கூறப்படுகிறது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஜனவரி 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் நாடு முழுவதும் போடப்படுகின்றன.

கோவாக்சினுக்கு எதிர்ப்பு
இதில் கோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனையின் 3-ம் கட்ட முடிவுகள் பகிரங்கப்படுத்தாத நிலையில் அதை பொதுமக்களுக்கு போடக் கூடாது என்பது எதிர்ப்புக்கு காரணம்.

குறைவான எண்ணிக்கை
ஜனவரி 16-ந் தேதி முதல் நாளில் நாடு முழுவதும் 1.91 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொண்டனர். ஆனால் தெலுங்கானா, தமிழகம் மற்றும் பீகார் மாநிலங்களில்தான் பதிவு செய்தவர்களில் 50%க்கும் குறைவானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

தமிழகத்தில் கோவாக்சின் குறைவு
தமிழகத்தில் முதல் நாளில் 600 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் 99 பேருக்குதான் போடப்பட்டது. 2-வது நாளான ஞாயிற்றுக்கிழமை கூட பிற்பகல் வரை 90 பேர் மட்டுமே கோவாக்சின் தடுப்பூசியை தமிழகத்தில் போட்டுக் கொண்டனர். தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கான ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திட பலரும் தயக்கம் தெரிவித்துள்ளது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

2 நாட்கள் நிலவரம்
நாடு முழுவதும் 2 நாட்களில் மட்டும் 2.24 லட்சம்ம் பேர் கொரோனா தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டுள்ளனர். இவர்களில் 447 பேருக்கு மட்டுமே ஒவ்வாமை இருந்தது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications