சொல்லி அனுப்புங்க பாஜகவுக்கு.. இணையும் பாரதம், வெல்லும் இந்தியா! இரண்டையுமே சொல்லிட்டாரே கார்கே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நிகழ்ச்சி நிரல் என்ன என்று கூட கூறாமல், நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மோடி அரசு முதன்முறையாகக் கூட்டுவதாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் வியூகக் குழுக் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இந்தியக் கூட்டணியின் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் தலைமையில் நடைபெற்றது. அதில் பேரவையை புறக்கணிக்க மாட்டோம் என்றும், பொதுமக்களின் முக்கிய பிரச்னைகளை எழுப்புவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Bharat will join and India will won - Mallikarjun kharge on special parliament meeting

இந்த கூட்டத்தில் கார்கே பேசுகையில், "நிகழ்ச்சி நிரல் என்ன என்று கூட கூறாமல், நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மோடி அரசு முதன்முறையாகக் கூட்டுகிறது. எந்த எதிர்க் கட்சியிலிருந்தும் யாரிடமும் கருத்து கேட்கவோ அல்லது தெரிவிக்கவோ இல்லை. இது ஜனநாயகத்தை நடத்துவதற்கான வழி அல்ல. ஒவ்வொரு நாளும், மோடி அரசாங்கம் ஒரு வருங்கால 'நிகழ்ச்சி நிரல்' பற்றிய ஒரு கதையை ஊடகங்களில் விதைக்கிறது.

இதன் மூலம் மக்கள் மீது சுமத்தப்படும் உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பும் புகை திரையை உருவாக்குகிறது. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், மணிப்பூர், சீனாவின் அத்துமீறல்கள், சிஏஜி அறிக்கைகள், மோசடிகள் மற்றும் நிறுவனங்களை பலவீனப்படுத்துதல் போன்ற முக்கிய பிரச்சினைகளை பாஜக வைத்திருக்க விரும்புகிறது.

அதை ஒதுக்கிவிட்டு எங்கள் மக்களை ஏமாற்ற பார்க்கிறது. சிறப்பு அமர்வுக்கான முன்னோக்கி வழி குறித்து இந்தியக் கூட்டணிக் கட்சிகள் விவாதித்தன. மக்கள் பிரச்சினைகளை எழுப்புவதில் நாங்கள் தயங்க மாட்டோம், இவற்றில் கவனம் செலுத்த விரும்புகிறோம். பாஜகவுக்கு தெரியப்படுத்துங்கள். இணையும் பாரதம், வெல்லும் இந்தியா!" என்று தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "இந்த கூட்டத்தொடர் எந்த வித பேச்சுவார்த்தையும் இல்லாமல் தன்னிச்சையாக கூட்டப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். சிறப்பு அமர்வுக்கு முன், கட்சியினருடன் பேசி, நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப் பட வேண்டும், ஆனால் அதுகுறித்த தகவல் எங்களிடம் இல்லை.

சிறப்பு அமர்வு குறித்த வெளியீட்டில் ஐந்து நாட்களிலும், அரசாங்க அலுவல் மட்டுமே எழுதப்பட்டுள்ளது, இது சாத்தியமற்றது. கடந்த முறை எழுப்ப முடியாத பிரச்னைகளையும், இம்முறை எழுப்ப முடிவு செய்துள்ளோம்." என்று தெரிவித்து உள்ளார்.

சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில்,

"1. பணவீக்கம், வேலையின்மை மற்றும் சிறுகுறு தொழில்கள் பற்றி விவாதிக்கப்பட வேண்டும்.

2. குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிப்பது பற்றி அரசாங்கம் பேசியிருந்தது, அதன் தற்போதைய நிலைமையைப் பற்றி பேச வேண்டும்.

3. அதானி வழக்கில் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் கோரிக்கை மீது விவாதம் நடத்த வேண்டும்.

4. சாதிவாரி கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து விவாதம் நடத்த வேண்டும்.

5. கூட்டாட்சி அமைப்புகளின் மீதான தாக்குதல்கள் மற்றும் பாஜக அல்லாத மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவது குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.

6. இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளம் போன்ற பேரழிவு மற்றும் பல மாநிலங்களில் கடுமையான வறட்சி நிலவரம் குறித்து பேசப்பட வேண்டும்.

7. லடாக்-அருணாச்சல பிரதேச எல்லையில் சீனாவின் அத்துமீறல் குறித்து விவாதம் நடத்த வேண்டும்.

8. ஹரியானா போன்ற பல மாநிலங்களில் பரவியுள்ள மதவாத பதற்றம் குறித்து பேசப்பட வேண்டும்.

9. மணிப்பூரில் நடந்த வன்முறைகள் குறித்த நிலைப்பாட்டை அரசு தெளிவுபடுத்த வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+