நாட்டில் அடிப்படைகள் வலுவாக இருக்கக் காரணம் என்ன தெரியுமா? பதிலளித்த நிதியமைச்சர்
டெல்லி: 2014ஆம் ஆண்டுக்கு பின் மத்திய பாஜக அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளால் மட்டுமே நாட்டின் அடிப்படைகள் மீண்டும் வலுப்பெற்றுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 75ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செபி அமைப்பின் நிர்வாகிகளும் பங்கேற்றனர். இதில் கலந்துகொண்டு பேசிய நிதியமைச்சர் 2014ஆம் ஆண்டுக்கு பின் மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால் மட்டுமே நாட்டின் அடிப்படைகள் வலுப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

செபி தலைவருக்கு வாழ்த்து
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்மலா சீதாராமன், செபி அமைப்பின் தலைவரான மாதபி பூரி கொரோனா பாதிப்பில் இருந்து விரைந்து குணமடைய வாழ்த்துவதாக தெரிவித்தார். அவர் இங்கு இருந்திருக்க வேண்டும், இருந்திருந்தால் நிச்சயம் பங்கேற்று பேசியிருப்பார். அவர் மீண்டும் அதே உற்சாகத்துடன் வருவார் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

வலைதளம் அறிமுகம்
தொடர்ந்து புதிய இ ட்ராக்கிங் மற்றும் அட்மினிஸ்ட்ரேஷன் தளமான நேத்ரா தளத்தை அறிமுகம் செய்துவைத்தார். அதேபோல் இந்திய வளர்ச்சி மற்றும் பொருளாதார திட்டத்திற்கான ஐடியாஸ் மொபைல் செயலியையும் தொடங்கி வைத்தார்.

பாஜக ஆட்சி பற்றி நிதியமைச்சர்
இதன்பின்னர் பேசிய நிர்மலா சீதாராமன், 2014 முதல் பாஜக அரசு எடுத்துள்ள பல நடவடிக்கைகளின் காரணமாக இந்தியாவின் அடிப்படைகள் மீண்டும் உறுதியாக இருக்கிறது. கொரோனா பரவலுக்கு முன் அரசு எடுத்த முக்கிய நடவடிக்கைகளான கார்ப்பரேட்களுக்கான வரி குறைப்பு, பொருளாதாரம் பெருமளவில் டிஜிட்டல் மயமாக்கப்படுவதை உறுதிசெய்தது, ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமலுக்கு கொண்டு வந்தது ஆகியவை இந்த சூழ்நிலைக்கு இந்தியாவை தயார்படுத்தியது என்று தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமன் பாராட்டு
கொரோனா பரவலின் போது அரசு இலக்கு வைத்து செயல்பட்ட அணுகுமுறை, பெரிதும் உதவியதாக தெரிவித்தார். அப்போது பொருளாதார விவகாரங்கள் துறை தரப்பில் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு நாட்டின் ஏராளமான பகுதிகளிலும் உதவிகளை வழங்கியது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் உட்கட்டமைப்பு மட்டுமல்லாமல், வாழ்வாதாரத்திற்கு ஏற்பவும் நிதி வழங்கப்பட்டது என பொருளாதார விவகாரங்கள் அமைச்சகத்துக்கு நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்தார்.
-
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க












Click it and Unblock the Notifications