அபார முன்னிலை.. பெரும்பான்மைக்கு தேவையான மேஜிக் நம்பரை தாண்டியது பாஜக கூட்டணி
Recommended Video
டெல்லி: முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை துவங்கியதுமே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கத் தொடங்கியது. இந்த முன்னிலை இதுவரை தொடர்கிறது.
லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியதுமே, தபால் ஓட்டுக்களில் பாஜக தலைமையிலான கூட்டணி முன்னிலை வகிக்கத் தொடங்கியது. 8.05 மணி நிலவரப்படி தே.ஜ.கூட்டணி 16 இடங்களில் முன்னிலை வகித்தது. அதில் 15 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2 இடங்களில் முன்னிலை வகித்தது. அதில் இரண்டுமே காங்கிரஸ் கட்சியின் தொகுதிகள்தான்.
பிறர் எந்த ஒரு தொகுதியிலும் அப்போது லீடிங் பெறவில்லை. ஆம் ஆத்மியும் முன்னிலை பெறவில்லை. காலை 9.15 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 276 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி 91 தொகுதிகளிலும், பிறர் 69 தொகுதிகளிலும் முன்னிலை வகித்தனர். பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 272 எம்பிக்கள் தேவை. காலை 9.15 மணிக்கே தேசிய ஜனநாயக கூட்டணி இந்த மேஜிக் நம்பரை தாண்டிவிட்டது. அதில் பாஜக மட்டுமே 229 தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது.
இந்த நிலையில், வர வர நிலை மாறுமா அல்லது இதே மாதிரி இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் இதே நிலைதான் நீடிக்கும் என்பதே முந்தைய தேர்தல் வரலாறு.
எக்ஸிட் போல்களில் பாஜக கூட்டணி முன்னிலை பெறும் என கூறப்பட்ட நிலையில், தற்போதைய துவக்க டிரெண்ட்டும் அதேபோல உள்ளது.