மகா., ஹரியானா, ஜார்க்கண்ட் சட்டசபையைக் கலைத்து லோக்சபா தேர்லோடு நடத்த பாஜக திட்டம்?
டெல்லி: மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைகளை கலைதது விட்டு லோக்சபா தேர்தலோடு அங்கும் சட்டசபைத் தேர்தலை நடத்த பாஜக திட்டமிடுவதாக தெரிகிறது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க கட்சிகள் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை பல்வேறு வகைகளில் வகுத்து வருகின்றன. அந்த வகையில் பாஜக இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெறுவது என்பதில் அதிதீவிரமாக வேலை செய்து வருகிறது.

இதற்காக பல்வேறு கட்ட ஆலோசனைகளில் ஈடுபட்டு வரும் பாஜக தலைமை இப்போது தங்கள் ஆட்சியில் உள்ள 3 மாநிலங்களின் சட்டப்பெரவைகளை கலைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விவசாயிகளுக்கு நிதியுதவி, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை ஆகியவற்றில் தங்களுக்கு ஆதரவு பெருகி வருவதாக கருதும் பாஜக வரும் நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு ஓரளவுக்கு ஆதரவு இருக்கும் என்றே கருதுகிறது. மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் பாஜக ஆளும்கட்சியாக உள்ளது.
இந்த மாநிலங்களின் பதவிக்காலம் 2019-ம் ஆண்டு அக்டோபரில் முடிவடைகிறது. மற்றொரு மாநிலமான ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2019-ம் ஆண்டு டிசம்பரில் முடிவடைய உள்ளது. ஆகவே இந்த வருடத்தோடு பதவிக் காலம் முடிவடைய உள்ள சட்டப்பேரவைகளை கலைக்க பாஜக தீவிரமாக யோசித்து வருகிறது.
ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து மாநிலத் தேர்தல்களையும் நடத்தினால் தேர்தல் செலவு குறையும் என நிதி ஆயோக் கூறியிருந்தது. பிரதமர் மோடியும் இதை பலமுறை கூறியுள்ளார். தமிழகத்தில் கூட அதிமுக தரப்பில் ஒரு சிலர் இதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் எல்லையில் நிலவும் போர் பதற்றம், விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ள நிதியுதவி ஆகியவை தங்களுக்கு வாக்குகளாக மாறும் என பாஜக தலைவர் அமிட்ஷா உட்பட சீனியர் தலைவர்கள் அனைவருமே நம்புகின்றனர். கர்னாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா ஓப்பன் ஸ்டேட்மெண்டே விட்டிருந்தார். இந்த போர் தங்களுக்கு 22 தொகுதிகளை பெற்றுத் தரும் என்று. இதற்கு பல்வேறு இடங்களிலும் கண்டனங்கள் எழுந்தது வேறு கதை
மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை கலைப்பது குறித்து பேசிய பாஜகவினர் இதற்கு முன் கடந்த வருட இறுதியில் நடைபெறவிருந்த தேர்தலை மனதில் வைத்து தெலுங்கான சட்டப்பேரவையை சந்திர சேகரராவ் கலைத்துவிட்டு பெருவெற்றியை பெற்று இப்போது ஆட்சியில் உள்ளதை சுட்டிக் காட்டுகிறார்கள். தெலுங்கானா சட்டப்பேரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டுவரை இருந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலின் தாக்கம் தங்கள் மாநிலத்திலும் இருக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்த சந்திர சேகரராவ் சட்டபேரவையை முன்கூட்டியே கலைத்து விட்டு தேர்தலை சந்தித்து இப்போது ஆட்சியில் உள்ளார்.
அதுபோல இப்போது சூழல் தங்களுக்கு ஓரளவுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் மகாராஷ்டிரா, ஹரியாணா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கும் சேர்த்தே தேர்தலை சந்திக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக அக்கட்சியின் தலைவர் அமிட்ஷா சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். மாநிலங்களும் ஒத்துக்கொள்ளும் சூழலில் வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து இந்த மூன்று மாநிலங்களும் சட்டப்பேரவைக்கான தேர்தலையும் சந்திக்கும் .
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications