தேர்தல் ரிசல்ட் வந்து 4 நாட்களாச்சே..3 மாநில முதல்வர்கள் யார்? முடிவெடுக்க முடியாமல் தவிக்குது பாஜக!
டெல்லி: ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி 4 நாட்களாகிவிட்ட நிலையில் இம்மாநிலங்களில் முதல்வர்கள் யார் என முடிவெடுக்க முடியாமல் பாஜக தத்தளித்து வருகிறது.
தெலுங்கானா, சத்தீஸ்கர், ம.பி, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றன. தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி இன்று முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளது. மிசோரம் முதல்வராக லால்துஹோமா நாளை பதவியேற்க உள்ளார்.

சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பாஜக வென்றுள்ளது. ஆனால் இந்த 3 மாநிலங்களின் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி இருப்பதால் பாஜக மேலிடம் முடிவெடுக்க முடியாமல் தத்தளித்து வருகிறது.
ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா தமக்குதான் முதல்வர் பதவி தர வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கிறார். அவருக்கு ஆதரவாக 25 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஆனால் பாஜக மேலிடமோ புதுமுகம் ஒருவரை முதல்வராக்க விரும்புகிறது. ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கான போட்டியில் அர்ஜூன் ராம் மேக்வல், தியாகுமாரி, அஸ்வினி வைஷ்ணவ், கஜேந்திர சிங் ஷெகாவத், சிபி ஜோஷி, பாபா பாலக்நாத் ஆகியோரும் உள்ளனர். அதே நேரத்தில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை ராஜஸ்தான் மாநில முதல்வராக்கவும் பாஜக மேலிடம் பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் இம்முறையும் தம்மையே முதல்வராக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். ஆனால் பாஜக மேலிடமோ வேறு ஒருவரை முதல்வராக்க முனைகிறது. இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களுக்கு போக முடியாது என மறுத்தார் சிவராஜ் சிங் சவுகான். ம.பி. மாநில முதல்வர் பதவிக்கான ரேஸில், எம்பி பதவிகளை ராஜினாமா செய்த நரேந்திர சிங் தோமர் மற்றும் பிரகலாத் சிங் பட்டேல் ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.
சத்தீஸ்கர்: பாஜக வெற்றி பெற்ற சத்தீஸ்கர் மாநிலத்திலும் புதுமுகம் ஒருவரையே முதல்வராக்க பாஜக முனைகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் முன்னாள் முதல்வர் ரமண் சிங், முதல்வர் பதவிக்கான ரேஸில் முதல் இடத்தில் உள்ளார். அதே நேரத்தில் அருண் சாவ், ரேணுகா சிங், விஷ்ணு தியோ சாய், ரவிச்சந்திர நேதம் ஆகியோரும் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்து வருகின்றனர். சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வர்கள் யார் என முடிவெடுக்க முடியாமல் பாஜக தத்தளித்து வருவதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தும் வருகின்றன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications