என்னை “ஜேக்கி”ன்னும் கூப்டுவாங்க.. ‘பாரத்’ என மாறினாலும் ‘இந்தியன்’ - ஜெயிலர் நடிகர் ஜாக்கி ஷராப்
டெல்லி: இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவது தொடர்பாக இந்தி நடிகர் அமிதாப் பச்சனை தொடர்ந்து ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷராப் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஜி20 மாநாட்டிற்காக குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய அழைப்பிதழில் இந்தியா என்ற பெயருக்கு பதில் பாரத் என குறிப்பிடப்பட்டு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இம்மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பாரத் என பெயர் மாற்றும் தீர்மானத்தை மத்திய அரசு கொண்டு வரும் என கூறப்படுகிறது.

இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவாகவும், பலர் எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், ஜெயிலர் உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷராப் இந்த பெயர் மாற்றம் குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார். ஜாக்கி ஷராப் மற்றும் தியா மிர்சா ஆகியோர் இன்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 'பிளானட் இந்தியா' பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "முன்னதாக, நமது நாடு பாரத் என்று அழைக்கப்பட்டது தானே? என் பெயர் ஜாக்கி. ஆனால் சிலர் என்னை ஜேக்கி, சிலர் என்னை ஜோக்கி என்று அழைக்கிறார்கள். அவர்கள் என் பெயரை மாற்றுகிறார்கள், அதனால் நான் மாற மாட்டேன். பெயர் மட்டும் மாறும், நாங்கள் மாற மாட்டோம்.
நீங்கள் நாட்டின் பெயரை மாற்றிக்கொண்டே இருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் ஒரு இந்தியர் என்பதை மறந்துவிடாதீர்கள்." என்று தெரிவித்தார். இதற்கு முன்பாக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ட்விட்டரில் வெளியிட்டு உள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்தியா, பாரத் பெயர் பிரச்சனையால் நாடு முழுவதும் விவாதங்கள் எழுந்து கொண்டு இருக்க அமிதாப் பச்சன் திடீரென, "பாரத் மாதா கி ஜெய்" என்று எழுதினார். அமிதாப் பச்சனின் ட்வீட்டைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, பிரதமர் மோடி இந்தியா என்ற பெயரை மாற்ற பயப்படுகிறார் என்று குற்றம்சாட்டினார்.
சவுத்ரி கூறுகையில், "இந்தியா என்ற பெயர் வெளிநாடுகளால் வழங்கப்பட்டது. எனவே, பிரதமர் இந்தியா என்ற பெயரைக் கேட்பதையே வெறுக்கிறார். INDIA என்ற எதிர்க்கட்சி கூட்டணி உருவான நாள் முதல் பிரதமருக்கு இந்தியா என்ற பெயர் மீதான வெறுப்பு அதிகரித்து உள்ளது" என்றார். இந்திய அரசியலமைப்பின் 1வது பிரிவு, "இந்தியா, அதாவது பாரத், மாநிலங்களின் ஒன்றியம்" என்று கூறுகிறது." என்றார்.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
"மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வருது".. லோக்சபா தொகுதி 816 ஆக அதிகரிக்க மத்திய அரசு தீவிரம்.. பிளான் ரெடி -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை?












Click it and Unblock the Notifications