Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பெரிய ஹீரோன்னு நினைப்பா.. இப்பதான் அப்பா ஞாபகம் வருதா".. கோபம் காட்டிய கோர்ட்.. ஜாமீன் மறுப்பு

துப்பாக்கியால் சுட்ட ஷாருக் பதானுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: "ஹீரோன்னு நினைப்பா.. அன்னைக்கு தப்பு செய்தபோது, எல்லோரையும் மறந்துட்டீங்க.. இப்பதான் உங்களுக்கு வயசான அப்பா ஞாபகத்துக்கு வருகிறாரா?" என்று, போலீசாரை துப்பாக்கியால் மிரட்டிய ஷாருக்கானுக்கு நீதிபதி ஜாமீன் தர மறுத்துவிட்டார்.. டெல்லியில் சிஏஏவுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட ஷாருக் பதான் கோரிய ஜாமீன் மனுவில் நீதிபதி தனது காட்டத்தையும் வெளிப்படுத்தினார்.

சில மாதங்களுக்கு முன்புவரை டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்தது.. அப்போது ஜாபர்தபாத் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனிலும் இந்த போராட்டம் வெடித்தது.

 CAA PROTEST: delhi riots shahrukh pathan bail rejected anti caa protest

இது சம்பந்தமாக கலவரங்களும் ஜாப்ராபாத், மவ்ஜ்பூர் உள்ளிட்ட இடங்களில் நடந்து, 47 பேர் பலியாகிவிட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்... இந்தியா முழுவதுமே ஒருவித பரபரப்பு பீடித்து வந்தது.

அந்நேரம், டெல்லி வன்முறை சம்பவத்தின்போது இளைஞர் ஒருவர் போலீஸை நோக்கி துப்பாக்கியால் மிரட்டிய வீடியோ சோஷியல் மீடியாவில் படுவேகமாக பரவியது... முகமெல்லாம் ஆவேசம், கோபமுமாக காணப்பட்டார் அந்த இளைஞர்.. மொத்தம் 8 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்பட்டது.

வீடியோவை வைத்து அவர் யார் என்று அடையாளம் காணப்பட்டதில் பெயர் ஷாரூக் பதான் என்பதும், வயசு 23 என்றும் தெரியவந்தது. ஆனால் அந்த இளைஞரை காணவில்லை.. போலீசார் தேடிவந்த நிலையில்தான், உத்தரப்பிரதேசத்தில் ரே பரேலியில் பதுங்கியிருந்தது தெரிந்தது.. பிறகு சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து டெல்லி அழைத்து சென்றனர்.. ஜெயிலிலும் அடைத்தனர்.

இதையடுத்து, தனக்கு ஜாமீன் வேண்டும் என்று கோரி, டெல்லி ஹைகோர்ட்டில் ஷாருக் மனுதாக்கல் செய்தார்.. அந்த மனுவில் அவர் சொல்லி இருந்த காரணம், "என் அப்பாவுக்கு 76 வயசு.. முதியவர் என்பதால் அவரை பார்த்து கொள்ள யாருமே இல்லை.. அதனால் தனக்கு ஜாமீன் வேண்டும்" என்று கேட்டார்.

இதையடுத்து ஷாருக் வழக்கறிஞர் 'கர்ப்பமாக உள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவியும் ஒருங்கிணைப்பாளருமான சூஃபுரா சர்க்காருக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜாமீன் தரப்பட்டுள்ளது.. அதுபோலவே ஷாருக்குக்கும் ஜாமீன் வழங்க வேண்டும்" என்று கோர்ட்டில் வாதாடினார்.

இது சம்பந்தமாக இன்று விசாரணை திரும்பவும் நடந்தது.. இருவரின் வாதங்களை நீதிபதி சுரேஷ்குமார் கெயித் ஏற்றுக் கொண்டார், ஆனால் ஜாமீன் தர மறுத்துவிட்டார்.. தனது உத்தரவில் இதை பற்றி கூறும்போது, "குற்றம் சாட்டப்பட்டவரின் நோக்கம் தன்னை ஹீரோவாக காட்டி கொள்வதிலேயே இருந்தது.. அதனால், இப்போது அவர் சட்டத்தையும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்... தப்பு செய்தபோது, எல்லோரையும் மறந்து விட்டார்... இப்பதான் அவருக்கு வயசான அப்பா ஞாபகத்துக்கு வருகிறாரா என்று கேட்டு ஜாமீன் அளிக்கவும் மறுத்து உத்தரவிட்டார் நீதிபதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+