100 ஆண்டுகளுக்கு பிறகு ஹோலி பண்டிகையில் வரும் சந்திர கிரகணம்! எப்படி பார்ப்பது? விஞ்ஞானிகள் விளக்கம்
டெல்லி: இந்த ஆண்டுக்கான முதல் சந்திரகிரகணம் இன்று ஏற்படுகிறது. நாடு முழுவதும் ஹோலி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இன்று சந்திரகிரகணம் ஏற்படுவது பெரும் கவனம் பெற்றிருக்கிறது.
சந்திர கிரகணம் என்பது ஒரு சிறப்பான அரிய வானியல் நிகழ்வாகும். ஆனால், இந்தியா போன்ற பாரம்பரிய கலாச்சாரங்கள் நிறைந்த நாடுகளில் கிரகணங்கள் குறித்த பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக, இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதேபோ பங்குனி உத்தர நாளாகும். இந்த நாளில் கிரகணம் வருவது குறித்து பல்வேறு விளக்கங்கள் சொல்லப்படுகின்றன.

பங்குனி உத்தர நாளில், ஹோலி கொண்டாடப்படும் போது சந்திர கிரகணம் ஏற்படுவது மிகவும் அரிதான விஷயம் என்றும், இதற்கு முன்னர் இப்படிய ஒரு சந்திர கிரகணம் நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றும் சொல்லப்படுகிறது. எனவே, இன்று உணவு எடுத்துக்கொள்ளுதல் தொடங்கி, வெளியே செல்லுதல் வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த சந்திர கிரகணத்தை எப்படி பார்ப்பது என்பது விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணங்கள் ஏற்படும். அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று ஏற்படுகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது அதன் நிழல் சந்திரன் மீது படும். இதைத்தான் சந்திர கிரகணம் என்று சொல்கிறார்கள். இதில் முழு சந்திர கிரகணம், பகுதி நேர சந்திர கிரகணம் என இரண்டு வகைகள் உண்டு. இன்று ஏற்படப்போவது பகுதி நேர சந்திர கிரகணம். அதாவது, பெனும்பிரல் சந்திர கிரகணம்.
அதாவது பூமியின் நிழல் முழுமையாக சந்திரன் மீது விழாமல், பூமியின் நிழலின் வெளிப்புற விளிம்புகள் மட்டும் சந்திரன் மீது விழும். இதனால் நிலவு முழுமையாக மறையாது. இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் காணமுடியாது. ஆனால் அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், தெற்கு நார்வே மற்றும் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் காண முடியும்.
இந்த சந்திர கிரகணம், இந்திய நேரப்படி காலை 10:23 மணிக்கு தொடங்கி மாலை 03:02 வரை 4 மணி 36 நிமிடங்கள் வரை நீடிக்கும். இந்தியாவில் பகல் பொழுது இருப்பதால் இதனை பார்க்க முடியாது. மேற்குறிப்பிட்ட நாடுகளில், உயர் திறன் கொண்ட தொலை நோக்கியை வைத்து இதை மிக தெளிவாக பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சூரிய கிரகணத்தைதான் வெறும் கண்களில் பார்ப்பது ஆபத்தானது. சந்திர கிரகணம் வெறும் கண்களில் பார்க்கலாம். கிரகணத்தை தெளிவாக பார்க்க, உயரமான இடங்களில் இருக்க வேண்டும். அதேபோல மேகமூட்டம் எதுவும் இருக்கக்கூடாது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
படிச்சு படிச்சு சொன்னோமே சண்டை வேணாம்னு! இப்போ பொணத்தைக் கூட எரிக்க முடியல! இப்படி ஒரு சிக்கலா? -
மொத்த இந்தியாவும் முடங்கப்போகுது.. தீவிரமாகும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. மோடியை சந்தித்த பூரி - ஜெய்சங்கர் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்












Click it and Unblock the Notifications