தேசத்திற்கு எதிரான குற்றங்களில் கவனம் செலுத்துங்கள்! CBIக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தல்
டெல்லி: நாட்டின் முதன்மை விசாரணை அமைப்புகள் மெல்லியதாக பரவி வருவதாகவும், அவை தேசிய பாதுகாப்பு மற்றும் தேசத்திற்கு எதிரான குற்றங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி சிபிஐ உருவாக்கப்பட்ட தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் சிபிஐ-ன் முதல் இயக்குநரான டிபி கோஹ்லியின் நினைவாக, டிபி கோஹ்லி நினைவு விரிவுரை நிகழ்த்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விரைவுரையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வழங்கினார்.

அப்போது பேசிய அவர், "நாட்டின் முதன்மை விசாரணை அமைப்புகள் மெல்லியதாக பரவி வருகிறது, அவை தேசிய பாதுகாப்பு மற்றும் தேசத்திற்கு எதிரான குற்றங்களில் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் பேசியதாவது, "ஊழல்-எதிர்ப்பு புலனாய்வு அமைப்பான சிபிஐ அதன் பங்கிற்கு அப்பால் உள்ள சில வழக்குகளிலும் தலையிட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது சிபிஐ-யின் நோக்கத்தை தாண்டி செயல்பட வேண்டிய பொறுப்பை சுமத்துகிறது.

நாட்டின் முதன்மை விசாரணை அமைப்புகளை மிக மெல்லியதாக பரப்பிவிட்டோம் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசத்திற்கு எதிரான பொருளாதார குற்றங்கள் தொடர்பான குற்றங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மத்திய விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் முதலில் சிபிஐதான் வழக்குப்பதிவு செய்தது. அதன் பின்னரே அமலாக்கத்துறை விசாரணை நடத்தி அவரை கைது செய்தது. அதேபோல டெல்லி அமைச்சர் 3 வரை தற்போது சிறையில் இருக்கின்றனர். இதற்கும் மத்திய விசாரணை/புலனாய்வு அமைப்புகள் முக்கிய காரணமாகும்.
அதேபோல மத்திய அரசின் கட்டளைக்கு ஏற்பட விசாரணை அமைப்புகள் செயல்படுவதாகவும் எதிரக்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், "தேசிய பாதுகாப்பு மற்றும் தேசத்திற்கு எதிரான குற்றங்களில் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறியிருப்பது பெரும் கவனம் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications