ஒரு அதிகாரிக்காக சிபிஐயை ஆட்டிப்படைக்கும் அரசு.. அஸ்தானா மீதான மோடியின் சாஃப்ட் கார்னர்!

சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவிற்கு ஆதரவாக பிரதமர் மோடி தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சிபிஐக்குள் நடக்கும் பெரிய யுத்தம்.. என்ன நடக்கிறது?

    டெல்லி: சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவிற்கு ஆதரவாக பிரதமர் மோடி தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இறைச்சி ஏற்றுமதி செய்து வந்த தொழிலதிபர் மொயின் குரேஷியின் வழக்கில் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இவர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா இருவரும் இதனால் விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாகேஸ்வர் ராவ் அதுவரை சிபிஐ இயக்குனராக செயல்படுவார்.

    முக்கியமானவர்

    முக்கியமானவர்

    இந்த வழக்கில் மிக முக்கியமான நபர் என்றால் அதிக சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாதான். அவர்தான் இந்த வழக்கில் சிறப்பு இயக்குனர் அஸ்தானாவிற்கு எதிரான ஆதாரங்களை திரட்டியது. அவரது டீம்தான் அஸ்தானாவிற்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. இந்த நிலையில்தான் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா விடுப்பில் செல்லும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மற்றவர்கள்

    மற்றவர்கள்

    அதேபோல் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவின் டீமில் இருந்து கொண்டு அஸ்தானாவிற்கு எதிரான சாட்சியங்களை திரட்டிய எல்லோரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். முக்கியமாக அஸ்தானாவிற்கு எதிரான வழக்கை விசாரித்து வந்த எஸ்பி அஜய் பாசியும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் தலைமையில்தான் நேற்று முதல்நாள் சிபிஐ அலுவலகத்தில் ரெய்டு நடந்தது.

    செல்ல பிள்ளை

    செல்ல பிள்ளை

    சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது மத்திய அரசு இவ்வளவு பாசம் கொள்ள நிறைய காரணம் இருக்கிறது. ராகேஷ் அஸ்தானா, குஜராத்தை சேர்ந்தவர். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை இவர்தான் விசாரணை செய்தது. மோடிக்கு நெருக்கமான இந்தியாவின் டாப் அதிகாரி இவர்தான். இவரை சிபிஐக்கு மாற்றியது பாஜகதான். 2017ல் இவர் சிபிஐக்கு நேரடியாக மாற்றப்பட்டதோடு, சிபிஐயின் சிறப்பு இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார்.

    பல கேள்விகள்

    பல கேள்விகள்

    இந்த வழக்கில் அஸ்தானாவிற்கு ஆதரவாக பாஜக செயல்படுகிறது என்று எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள். இவர்கள் இதற்கு பின்வரும் காரணங்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

    1. அஸ்தானாவை பணியில் இருந்து நீக்காமல் விடுப்பில் செல்ல சொன்னது.

    2. அஸ்தானாவிற்கு எதிரான அனைத்து அதிகாரிகளையும் இடம்மாற்றியது.

    3. முக்கியமான சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை விடுப்பில் செல்ல சொன்னது.

    4. அஸ்தானா வழக்கை விசாரித்த அஜய் பாசியை பணியிட மாற்றம் செய்தது.

    5. அஸ்தானாவிற்கு நெருக்கமானவர்களையே அவருக்கு எதிரான வழக்கை விசாரிக்க நியமித்து இருப்பது, ஆகிய முக்கியமான விஷயங்கள்தான் இந்த கேள்வியை எழுப்பி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+