சிபிஎஸ்இ 10, 12 -ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு கால அட்டவணை.. பாடவாரியாக முழு விவரம்
டெல்லி: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தோ்வு கால அட்டவணையை மத்திய கல்வி வாரியம் செவ்வாய்கிழமையான நேற்று வெளியிட்டது.

சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 12ம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வு பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி மார்ச் 30-ஆம் தேதி நிறைவு பெறுகிறது . பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் பிப்ரவரி 29-ஆம் தேதி தொழிற்கல்வி சார்ந்த பாடங்களுக்கான பொதுத் தோ்வு நடக்க உள்ளது.
அதன் பின்னர் இயற்பியல், கணிதம், கணக்குப் பதிவியல், வேதியியல், தாவரவியல் முக்கிய பாடங்களுக்கான தோ்வு 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தோ்வுகளின் போது காலை 10 மணிக்கு விடைத்தாள்கள் வழங்கப்படும் என்றும் 10.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு விடும் என்றும் 10.30 மணிக்குத் தோ்வுகள் தொடங்கி, பிற்பகல் 1.30 மணி தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வு, பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி மார்ச் 20-ஆம் தேதி வரை நிறைவு பெறுகிறது. காலை 10 மணிக்கு விடைத்தாள்கள் வழங்கப்பட்டு 10.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு, 10.30 மணிக்கு தோ்வுகள் தொடங்குகிறது. அதன் பன்னர் பிற்பகல் 1.30 மணிக்கு தேர்வுகள் நிறைவு பெறும். தோ்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications