சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு தேர்வுகள் ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடைபெறும்
டெல்லி: சி.பி.எஸ். இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான எஞ்சிய பொது தேர்வுகள் ஜூலை 1-ந் தேதி முதல் ஜூலை 15-ந் தேதி வரை நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் லாக்டவுனால் நாடு முழுதுவம் பொதுத்தேர்வுகள் நடத்தப்ப்டுவதில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்துள்ளன.
சி.பி.எஸ்.இ தரப்பும் அவ்வப்போதும் 10,12-ம் வகுப்புகளுக்கான எஞ்சிய பொதுத்தேர்வுகள் அனைத்தும் நடைபெறும்; இதற்கான கால அட்டவணைப்படி விரைவில் வெளியிடப்படும் என கூறி வருகிறது.
இந்த நிலையில் நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. நீட் தேர்வு ஜூலை 26-ந் தேதியும் ஜே.இ.இ. தேர்வு, ஜூலை 18,20,21,22 மற்றும் 23 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்தான் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சி.பி.எஸ். இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான எஞ்சிய பொது தேர்வுகள் ஜூலை 1-ந் தேதி முதல் ஜூலை 15-ந் தேதி வரை என அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிராக கமல் ஹாசனின் மநீம வழக்கு
இருப்பினும் பாடவாரியாக தேர்வு விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. இந்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஎஸ் இ தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.