ஒருவரை தொடுவதால் உங்களுக்கு கொரோனா பரவுவது இல்லை.. ஆபத்து வேறு இடத்தில்.. சி.டி.சி வழிகாட்டுதல்கள்
டெல்லி: ஒருவரை தொடுவதால் நீங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட மாட்டீர்கள். கொரோனா எப்படி பரவுகிறது என்பது குறித்து சி.டி.சி வழிகாட்டுதல்கள் என்ன சொல்கிறது என்பதை இப்போது பார்ப்போம்.
COVID-19 தொற்றுநோய் நம் வாழ்வை மோசமாக பாதித்து உள்ளது. பல்வேறு மாநிலங்களில் இரவு நேர லாக்டவுன் போடப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதிப்பு என்பது தினமும் புதிய உச்சத்தை தொடுகிறது. நேற்று இதுவரை இல்லாத அளவாக 2லட்சம் பேரை கொரோனா பாதித்துள்ளது.
நம்மை சுற்றியுள்ள துப்புரவு பணியாளர்களை ஒதுக்கி வைத்து வெறுக்கும் நிகழ்வுகள் கடந்த ஓராண்டு முழுவதும் நடந்தன. நாம் ஒவ்வொருவரும் இப்போது வீட்டை விட்டு வெளியேறும்போதெல்லாம் ஒரு பாட்டில் சானிடைசரை எடுத்துச் செல்கிறோம்.

ஆபத்து வேறு இடத்தில்
மால்கள், சினிமா அரங்குகள் மற்றும் கஃபேக்கள் போன்ற பொது இடங்களின் பல்வேறு இடங்களின் சுத்தம் குறித்து நாம் அதிகம் அக்கறைப்படுவோம். இதில் ஆனால் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (சி.டி.சி) சமீபத்திய வழிகாட்டுதல்கள் படி நமக்கும் கொரோனா பரவும் ஆபத்து வேறு இடத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டுகின்றன.

வாயில் வரும் நீர்
சி.டி.சி களின் சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, நீங்கள் அசுத்தமான மேற்பரப்பில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 10,000 ல் ஒன்று என்ற அளவில் அபூர்வமாக தான் இருக்குமாம். ஆனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரின் வாய் மற்றும் மூக்கிலிருந்து வெளியேறும் நீர் துளிகளால் தான் என்று
சி.டி.சி வழிகாட்டுதல்கள், கூறுகிறது.

முககவசம், சோப்பு நீர்
மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது முககவசம் அணிவது, கைகளை கழுவுதல் மற்றும் வழக்கமான சோப்பு மற்றும் தண்ணீருடன் மேற்பரப்புகளை சுத்தம் செய்வது வைரஸின் பரவலைக் குறைக்க உதவும் என்கிறது.

எது சிறந்தது
எது சிறந்தது நியூயார்க் டைம்ஸ் இல் ஒரு சுகாதார நிபுணரைக் இதுபற்றி குறிப்பிடுகையில்,, "அசுத்தமான மேற்பரப்பைத் தொடுவதன் மூலம் யாரும் இதுவரை COVID-19 ஐப் பெற்றிருக்கிறார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை" என்று தெரிவித்தது. சமூக இடைவெளியை பராமரிப்பது மற்றும் முககவசம் அணிவது என்பது தான் சுத்தத்தைவிட கொரோனா வைரஸுக்கு எதிரான சிறந்த முன்னெச்சரிக்கைகள் ஆகும்" என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications