ஒருவரை தொடுவதால் உங்களுக்கு கொரோனா பரவுவது இல்லை.. ஆபத்து வேறு இடத்தில்.. சி.டி.சி வழிகாட்டுதல்கள்
டெல்லி: ஒருவரை தொடுவதால் நீங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட மாட்டீர்கள். கொரோனா எப்படி பரவுகிறது என்பது குறித்து சி.டி.சி வழிகாட்டுதல்கள் என்ன சொல்கிறது என்பதை இப்போது பார்ப்போம்.
COVID-19 தொற்றுநோய் நம் வாழ்வை மோசமாக பாதித்து உள்ளது. பல்வேறு மாநிலங்களில் இரவு நேர லாக்டவுன் போடப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதிப்பு என்பது தினமும் புதிய உச்சத்தை தொடுகிறது. நேற்று இதுவரை இல்லாத அளவாக 2லட்சம் பேரை கொரோனா பாதித்துள்ளது.
நம்மை சுற்றியுள்ள துப்புரவு பணியாளர்களை ஒதுக்கி வைத்து வெறுக்கும் நிகழ்வுகள் கடந்த ஓராண்டு முழுவதும் நடந்தன. நாம் ஒவ்வொருவரும் இப்போது வீட்டை விட்டு வெளியேறும்போதெல்லாம் ஒரு பாட்டில் சானிடைசரை எடுத்துச் செல்கிறோம்.
கொரோனா மரணங்கள்- யாரும் தடுக்க முடியாது;வயதானால் சாகத்தான் வேண்டும்: ம.பி. அமைச்சரின் சர்ச்சை பேச்சு
ஆபத்து வேறு இடத்தில்
மால்கள், சினிமா அரங்குகள் மற்றும் கஃபேக்கள் போன்ற பொது இடங்களின் பல்வேறு இடங்களின் சுத்தம் குறித்து நாம் அதிகம் அக்கறைப்படுவோம். இதில் ஆனால் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (சி.டி.சி) சமீபத்திய வழிகாட்டுதல்கள் படி நமக்கும் கொரோனா பரவும் ஆபத்து வேறு இடத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டுகின்றன.
வாயில் வரும் நீர்
சி.டி.சி களின் சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, நீங்கள் அசுத்தமான மேற்பரப்பில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 10,000 ல் ஒன்று என்ற அளவில் அபூர்வமாக தான் இருக்குமாம். ஆனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரின் வாய் மற்றும் மூக்கிலிருந்து வெளியேறும் நீர் துளிகளால் தான் என்று
சி.டி.சி வழிகாட்டுதல்கள், கூறுகிறது.
முககவசம், சோப்பு நீர்
மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது முககவசம் அணிவது, கைகளை கழுவுதல் மற்றும் வழக்கமான சோப்பு மற்றும் தண்ணீருடன் மேற்பரப்புகளை சுத்தம் செய்வது வைரஸின் பரவலைக் குறைக்க உதவும் என்கிறது.
எது சிறந்தது
எது சிறந்தது நியூயார்க் டைம்ஸ் இல் ஒரு சுகாதார நிபுணரைக் இதுபற்றி குறிப்பிடுகையில்,, "அசுத்தமான மேற்பரப்பைத் தொடுவதன் மூலம் யாரும் இதுவரை COVID-19 ஐப் பெற்றிருக்கிறார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை" என்று தெரிவித்தது. சமூக இடைவெளியை பராமரிப்பது மற்றும் முககவசம் அணிவது என்பது தான் சுத்தத்தைவிட கொரோனா வைரஸுக்கு எதிரான சிறந்த முன்னெச்சரிக்கைகள் ஆகும்" என்றார்.