நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!
டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

63 வயதான நிர்மலா சீதாராமன் மருத்துவமனையின் எய்ம்ஸ் மருத்துவமனையின் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று மதியம் 12 மணியளவில் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதனால் அங்குச் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழக்கமான பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு வயிற்றில் சிறியளவில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸில் அவருக்கு மருத்துவ வல்லுநர் குழு சிகிச்சை அளித்து வருகிறது.
மிக விரைவில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த சனிக்கிழமை சென்னையில் அமைந்துள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டனர்.
நேற்றைய தினம் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர் தூவி மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications