சுதந்திர தின கொண்டாட்டம் : கொரோனா முன்களப்பணியாளர்களை கவுரவிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்
சுதந்திர தின நாளில் கொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்க வேண்டும் மற்றும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களையும் கவுரவிக்கும் விதமாக விழாவிற்கு அழைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி: சுதந்திர தின நாளில் கொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்க வேண்டும் மற்றும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களையும் கவுரவிக்கும் விதமாக விழாவிற்கு அழைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் 73வது சுதந்திர தினம் நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவி வருவதால் தலைநகர் டெல்லியில் அதிக அளவில் பார்வையாளர்கள் பங்கேற்க அழைக்கப்பட மாட்டார்கள். தனி மனித இடைவெளியோடு கூடிய கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.

பள்ளி மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு இல்லை என்றும் என்சிசி மாணவர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி பேசும் பாதுகாப்பு அரணிற்குள் விஐபிக்களுக்கு அனுமதி இல்லை. சுமார் 100 பேர் மட்டுமே கீழ் தளத்தில் அமர அனுமதிக்கப்பட உள்ளனர்.
கொரோனா நோய்த்தொற்றுடன் போராடி வெற்றிபெற்ற சுமார் 1500 கொரோனா வெற்றியாளர்கள் இம்முறை சுதந்திரதின விழாவில் கலந்துகொள்வார்கள். இதில் 500 பேர் காவல்துறையைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். மீதமுள்ள 1000 பேர் நாட்டின் பல பகுதிகளிலிருந்து அழைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே கொரோனா காலத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டும் என மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
•சுதந்திர தினத்தின் போது பெரிய அளவிற்கு மக்கள் கூடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.
•தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுதந்திர தினத்தை கொண்டாடவும் அறிவுறுத்தல்.
•சுதந்திர தின நாளில் கொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்க வேண்டும்
•கொரோனாவில் இருந்து மீண்டவர்களையும் கவுரவிக்கும் விதமாக விழாவிற்கு அழைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications