Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் வரப்போகுது.. அகவிலைப்படி எப்போது வரும் தெரியுமா?.. சூப்பர் சான்ஸ் இருக்காமே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி விரைவில் 4சதவீதம் உயர்த்தப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியவண்ணம் உள்ள நிலையில், அதுகுறித்து ஒரு மகிழ்ச்சி தகவல் கசிந்துள்ளது.
நாட்டில் உள்ள 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் ஆண்டுக்கு 2 முறை அதாவது ஜனவரி முதல் ஜுன் மற்றும் ஜூலை முதல் டிசம்பர் மாதங்களுக்கு உயர்த்தி அளிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு: அந்தவகையில், இந்த முறையும், மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ எனப்படும் அகவிலைப்படி நிலுவைத்தொகையை அனுப்புவதுடன், இந்த மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயரும் வாய்ப்புகள் உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

Central Government Employees likely to get Dearness Allowance hike soon, say sources

இதனிடையே, மத்திய பணியாளர் நலத்துறை அகவிலைப்படியை எவ்வளவு உயர்த்த வேண்டும் என்ற அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியும் வைத்திருக்கிறது.. இதன் அடிப்படையிலேயே அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்புள்ளது. எப்படியும், இந்த முறை, 3 முதல் 4 சதவீதம் வரை அகவிலைப்படி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த யூகம், உண்மையானால், அகவிலைப்படி தற்போதுள்ள 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதத்தை எட்டும் என்றும் தெரிகிறது.

குறிப்பாக, அகவிலைப்படி 46 சதவீதம் என கணக்கிட்டால், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ 18,000 இருக்கக்கூடும். தீபாவளியும் வரப்போகிறது என்பதால், இந்த மாத இறுதிக்குள்ளேயே அதாவது செப்டம்பர் மாத இறுதிக்குள் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரப்போகிறதாம்.

எகிறும் சம்பளம்: அறிவிப்பு வெளியானால், அது சம்பளத்தில் ஜூலை 1,2023 இருந்து அமலுக்கு வரும் என்றும், அகவிலைப்படி 3% உயர்வுடன் வரும் என்றும், இதனால், ஊழியர்களின் சம்பளம் கணிசமாக எகிறும் என்றும் தகவல்கள் கூறுகின்றன..

கடந்த மாதம், அகில இந்திய ரயில்வே ஃபெடரேஷன் பொதுச்செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா பேசும்போது, "அகவிலைப்படியில் 4 சதவீத புள்ளிகளை உயர்த்தும், ஆனால், அகவிலைப்படி உயர்வு 3 சதவீத புள்ளிகளுக்கு சற்று அதிகமாக இருக்கும்... DA 3 சதவீத புள்ளிகள் அதிகரித்து 45 சதவீதமாக இருக்கும்" என்று கூறியிருந்தார்.

தகவல் வரவில்லை: இந்நிலையில் 2023 ஜூலை முதல் டிசம்பர் வரையிலான மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து இன்னும் மத்திய அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை.. எனினும், நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அகவிலைப்படி உயர்வு குறித்த விவாதங்கள் நடத்தப்படும் என்றும், இதன் பிறகு அகவிலைப்படி உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், 4 சதவீத அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பை வெளியிட்டவுடன் தமிழக அரசு அகவிலைப்படி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடும் என்று ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

பயனாளிகள்: தற்போதுவரை, பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் என, 1 கோடிக்கும் அதிகமானோர் 42 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். விரைவில் அகவிலைப்படியை உயர்த்தி, அறிவிப்பு வெளியானால், ஒரு கோடிக்கும் அதிகமான பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலன் அடையக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+