சிகரெட் துண்டுகள், பேனர்கள் உள்பட 12 பிளாஸ்டிக்குகள் மீது தடை விதிக்கும் மத்திய அரசு
Recommended Video
டெல்லி: குளிர்பான பாட்டில்கள், தெர்மாகோல்கள், சிகரெட் துண்டுகள் உள்பட 12 பிளாஸ்டிக்குகள் மீது தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. அதன்படி 12 பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய அரசு முயற்சிக்கிறது.

அந்த வகையில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த பட்டியலை தொகுத்துள்ளது. அதன்படி 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பௌல்கள், கேரி பேக்குகள், பேக் செய்யும் பேப்பர்கள், கப், கிண்ணங்கள், தட்டுகள், லேமினேட் செய்யப்பட்ட கிண்ணங்கள், தட்டுகள், சிறிய பிளாஸ்டிக் பொருட்கள், சிகரெட் துண்டுகள், கொடிகள், பலூன்கள், மெழுகுவர்த்திகள், குளிர்பான பாட்டில்கள், ரோட்டோரம் வைக்கப்படும் பேனர்கள் (100 மைக்ரானுக்கு குறைவானது) ஆகியவற்றுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு கேடை விளைவிக்கும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை 2022-ஆம் ஆண்டுக்குள் தடை செய்வது என சுற்றுச்சூழலுக்கு பாதிப்புக்கு எதிரான அமைப்பு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.
மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக எதை பயன்படுத்துவது என்பது குறித்த ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சுதந்திர தினத்தின்போது செங்கோட்டையில் உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் நிறுத்திவிடுவோம் என தெரிவித்திருந்தார்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications