Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட்டர்னிஜெனரல் மற்றும் சொலிஸ்டர் ஜெனரலின் பதவிக்காலம் நீட்டிப்பு.. மத்திய அரசு அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் அட்டர்னிஜெனரல் மற்றும் சொலிஸ்டர் ஜெனரல் ஆகியோரின் பதவிக்காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் அதிகாரபூர்வ சொலிஸ்டர் ஜெனரலாக துஷார் மேத்தா இருக்கிறார். அதேபோல் அட்டர்னி ஜெனரலாக கேகே வேணுகோபால் இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டது தொடங்கி ரபேல் வழக்கு வரை பல முக்கிய வழக்குகளில் மத்திய அரசு சார்பாக இவர்கள் ஆஜராகி இருக்கிறார்கள்.

Central govt retained Attorney General and Solicitor General

இந்த நிலையில் இவர்கள் இருவரின் பதவிக்காலம் வரும் ஜூன் 30ம் தேதியோடு முடியும் நிலையில் இவர்களின் பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய சொலிசிட்டர் ஜெனரலாக துஷார் மேத்தா மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையின் நியமனக் குழுவால் நியமனம் செய்யப்பட்ட அவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். 2018ல் இவர் முதலில் நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக கே.கே. வேணுகோபால் மீண்டும் ஓராண்டிற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜூலை 1ம் தேதி முதல் அவரின் பதவிக்காலம் தொடங்கும். இவர் 2017ல் தலைமை வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

அதேபோல் மத்திய அரசுக்கு புதிதாக 6 துணை சொலிஸ்டர் ஜெனரல்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதன்படி துணை சொலிஸ்டர் ஜெனரல்கள் பால்பிரி சிங், சூர்யபிராகாஷ் வி ராஜு, ரூபிண்டர் சிங் சூரி, என் வெங்கட்ராமன், ஜயந்த கே சுட், ஐஸ்வர்யா பாட்டி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அளித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+