ராஜஸ்தானில் பாஜகவிற்கு தோல்வி பயம்.. புது வியூகத்தோடு வருகிறார் அமித்ஷா
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்றேயாக வேண்டும் என்ற துடிப்பில் உள்ள பாஜக தலைமை புதிய வியூகத்தோடு களம் இறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக ஆட்சி ராஜஸ்தானில் நடந்து வருகிறது. டிசம்பர் 7ம் தேதி, அங்கு ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 5 ஆண்டு கால பாஜக ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாக வெளியாகி வரும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக அமைச்சர்கள் மீது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊழல் குற்றச்சாட்டுகள்
எனவே யாருக்கெல்லாம் போட்டியிட டிக்கெட் வழங்கப்படுகிறதோ அதைப்பொருத்து வெற்றி பெற முடியும் என்று பாஜக நம்புகிறது. ஊழல் குற்றச்சாட்டுகள், மக்களை மதிக்காமல் நடந்து கொண்டது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை இப்போதுள்ள பாஜக சீனியர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

ஜாதி வாக்குகள்
இளைஞர்களுக்கு அதிக அளவுக்கு போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் முடிவு செய்துள்ளார்களாம். ஜாதி ரீதியாக வாக்குகளை பெற அதற்கேற்ப சீட்டுகளை கொடுக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றனவாம்.

கோஷ்டி பூசல்
இதுதவிர காங்கிரசுக்குள் நடக்கும் கோஷ்டி பூசலையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த பாஜக முயலுகிறது. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, அக்கட்சியின், தேசிய தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். இது எதிர்க்கோஷ்டிக்கு அதிருப்தியை ஏற்படுத்தி, தேர்தல் பணியாற்ற சுணக்கம் காட்டி வருகிறார்கள். இதை பாஜக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

பழைய முகங்கள்
பாஜகவை பொறுத்தளவில் புதிய முகங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்பது அஜென்டா. காங்கிரசோ பழைய முகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளது. வசுந்தராதான் பாஜக முதல்வர் பதவிக்கான தேர்வு என்றபோதிலும், பல புதிய முகங்களுக்கு டிக்கெட் கொடுத்து வாக்காளர்களை ஈர்க்க மத்திய பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாம். ஏபிபி டிவி சேனல் சர்வே, காங்கிரசுக்குதான் ராஜஸ்தானில் சிறப்பான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ள நிலையில், இம்முறை வேட்பாளர் பட்டியலை உருவாக்க உள்ளது, ஜெய்ப்பூர் அல்ல, டெல்லி என்கிறார்கள்.
[தெலுங்கானா, மபி, சத்தீஷ்கர், மிசோரம், ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு.. டிச. 11ல் ரிசல்ட்]
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications