கொரோனா: ஒன்று கூடல்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை- மத்திய அரசு அறிவுறுத்தல்
டெல்லி: பொது இடங்களில் ஒன்று கூடுவது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
கொரோனா தாக்குலைத் தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து சுற்றறிக்கைகளை அனுப்பி வழிகாட்டி வருகிறது.

அதில், பொது இடங்களில் ஒன்று கூடுதல் குறித்த ஒன்றும் அடங்கும். பொதுவாக மக்களை ஒன்று கூடுதலை தவிர்க்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அப்படியே ஒன்றுகூடல் நிகழ்ந்தால் அங்கு என்ன மாதிரியான முன்னெச்சரிக்கைகள் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சுற்றறிக்கை அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications