உள்நாட்டு விமான சேவைகளில் இருக்கை கட்டுப்பாடுகள் அக்.18 முதல் முழுமையாக தளர்வு
டெல்லி: கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் உள்நாட்டு விமான சேவைகளில் இருக்கைகள் எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் வரும் 18-ந் தேதி முதல் முழுமையாக தளர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து உள்நாட்டு விமான சேவைகள் முன்னரைப் போல கட்டுப்பாடுகள் இல்லாமல் இயக்கப்படும்.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் அனைத்து துறைகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. உள்நாட்டு விமான சேவைகளிலும் இத்தகைய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தன. கடந்த மார்ச் 25-ல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட போது இது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

உள்நாட்டு விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன. சிறப்பு விமானங்கள், சரக்கு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டும் வந்தன. சுமார் 2 மாத காலத்துக்குப் பின்னர் உள்நாட்டு விமான சேவை சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டது.
அதாவது உள்நாட்டு விமான சேவைகளில் 54% இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இதுதான் தற்போது வரை பின்பற்றப்பட்டும் வருகிறது. அதேபோல் கொரோனா பரவலைத் தடுக்க முக கவசம் அணிவது உள்ளிட்டவை கட்டாயமாகவும் பின்பற்றப்பட்டும் வருகிறது. முதல் கட்டமாக நாடு முழுவதுமே 870 விமானங்கள் இயக்கப்பட்டன. பின்னர் கொரோனா பரவல் குறைய குறைய இந்த எண்ணிக்கை சற்று அதிகரிக்கப்பட்டு வந்தது.
இருந்த போதும் இதுவரை உள்நாட்டு விமான சேவைகள் முழுமையாக மொத்தம் 100% என்ற அளவில் தொடங்கப்படவில்லை. இதனிடையே நாடு முழுவதும் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. ஒருநாள் கொரோனா பாதிப்பும் மிக மிக குறைவாக இருந்து வருகிறது. கேரளாவில்தான் ஒருநாள் பாதிப்பு சற்று கூடுதலாக இருந்து வருகிறது. இருந்தபோதும் கடந்த வாரங்களை ஒப்பிடுகையில் கேரளாவில் கொரோனா பரவல் கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டிருக்க்கிறது. இதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் காலங்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முழுவதுமாக தளர்த்தப்பட்டும் வருகின்றன.
இதன் ஒருபகுதியான உள்நாட்டு விமான சேவைகளுக்கான கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் 18-ந் தேதி முதல் இருக்கை கட்டுப்பாடு உள்ளிட்டவைகள் எதுவும் இல்லாமல் முழுமையான 100% இருக்கை வசதிகளுடன் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் முழுமையாக உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்பட உள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications