உள்நாட்டு விமான சேவைகளில் இருக்கை கட்டுப்பாடுகள் அக்.18 முதல் முழுமையாக தளர்வு
டெல்லி: கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் உள்நாட்டு விமான சேவைகளில் இருக்கைகள் எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் வரும் 18-ந் தேதி முதல் முழுமையாக தளர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து உள்நாட்டு விமான சேவைகள் முன்னரைப் போல கட்டுப்பாடுகள் இல்லாமல் இயக்கப்படும்.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் அனைத்து துறைகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. உள்நாட்டு விமான சேவைகளிலும் இத்தகைய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தன. கடந்த மார்ச் 25-ல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட போது இது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

உள்நாட்டு விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன. சிறப்பு விமானங்கள், சரக்கு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டும் வந்தன. சுமார் 2 மாத காலத்துக்குப் பின்னர் உள்நாட்டு விமான சேவை சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டது.
அதாவது உள்நாட்டு விமான சேவைகளில் 54% இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இதுதான் தற்போது வரை பின்பற்றப்பட்டும் வருகிறது. அதேபோல் கொரோனா பரவலைத் தடுக்க முக கவசம் அணிவது உள்ளிட்டவை கட்டாயமாகவும் பின்பற்றப்பட்டும் வருகிறது. முதல் கட்டமாக நாடு முழுவதுமே 870 விமானங்கள் இயக்கப்பட்டன. பின்னர் கொரோனா பரவல் குறைய குறைய இந்த எண்ணிக்கை சற்று அதிகரிக்கப்பட்டு வந்தது.
இருந்த போதும் இதுவரை உள்நாட்டு விமான சேவைகள் முழுமையாக மொத்தம் 100% என்ற அளவில் தொடங்கப்படவில்லை. இதனிடையே நாடு முழுவதும் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. ஒருநாள் கொரோனா பாதிப்பும் மிக மிக குறைவாக இருந்து வருகிறது. கேரளாவில்தான் ஒருநாள் பாதிப்பு சற்று கூடுதலாக இருந்து வருகிறது. இருந்தபோதும் கடந்த வாரங்களை ஒப்பிடுகையில் கேரளாவில் கொரோனா பரவல் கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டிருக்க்கிறது. இதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் காலங்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முழுவதுமாக தளர்த்தப்பட்டும் வருகின்றன.
இதன் ஒருபகுதியான உள்நாட்டு விமான சேவைகளுக்கான கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் 18-ந் தேதி முதல் இருக்கை கட்டுப்பாடு உள்ளிட்டவைகள் எதுவும் இல்லாமல் முழுமையான 100% இருக்கை வசதிகளுடன் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் முழுமையாக உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்பட உள்ளது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications