12-18 வயதினருக்காக.. விரைவில் வருகிறது சைடஸ் கேடிலா தடுப்பூசி.. மத்திய அரசின் குட் நியூஸ்!
டெல்லி: குஜராத்தின் அகமதாபாத் அருகே சங்கோதர் பகுதியில் இயங்கி வரும் சைடஸ் கேடிலா நிறுவனம் ZyCoV-D(சைகோவ்-டி) என்ற கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியை 28,000 தன்னார்வலர்களுக்கு செலுத்தி தீவிர பரிசோதனை நடந்தன.
இதில் 3 கட்ட பரிசோதனைகளும் முடிவடைந்துள்ளன. சைகோவ்-டி கொரோனா தடுப்பூசியானது புதிய டெல்டா வகை கொரோனா வைரஸ்களிலிருந்து பாதுகாக்கும் திறன் கொண்டவை என்று சைடஸ் கேடிலா நிறுவனம் தெரிவித்து இருந்தது.

சைடஸ் கேடிலா தடுப்பூசி
சைகோவ்-டி தடுப்பூசியின் அவரச கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கும்படி சைடஸ் கேடிலா நிறுவனம் , இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளது. இந்த நிலையில் 12-18 வயதுடைய குழந்தைகளுக்கான சைடஸ் கேடிலாவின் தடுப்பூசிக்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கான தடுப்பூசி
சைடஸ் கேடிலா நிறுவனம் தனது சைகோவ்-டி தடுப்பூசியை 12 வயது முதல் 18 வயது உடையவர்களுக்கும் பரிசோதித்து வெற்றி கண்டுள்ளது. தங்கள் தடுப்பூசி குழந்தைகளுக்கு பக்க விளைவுகள் ஏற்படுத்தாமல், கொரோனாவில் இருந்து காப்பாற்றும் வீரியம் கொண்டது என்று சைடஸ் கேடிலா நிறுவனம் கூறி இருந்தது. இதனால் தான் சைகோவ்-டி தடுப்பூசி குழந்தைகளுக்கு செலுத்தப்படுவது குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் சொல்வது என்ன?
எனவே இத்தியாவில் சைடஸ் கேடிலாவின் சைகோவ்-டி தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஒப்புதல் அளித்து விட்டால் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

5-வது தடுப்பூசி
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட், பாரத் பயோடெக்கின் கோவாக்சின், ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட மாடர்னா ஆகியவற்றிற்கு இந்தியாவில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் சைகோவ்-டி 5-வது தடுப்பூசியாக மாற இருப்பது குறிப்பிடத்தக்கது. 2 முதல் 18 வயதுக்குட்பட்ட தன்னார்வலர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள பாரத் பயோடெக்கிற்கு மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
கிலோ முந்திரி வெறும் 50 ரூபாயா? இந்தியாவின் ஆச்சரியமான 'முந்திரி கிராமம்' - ஒரு விசித்திரப் பயணம்! -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications