''வேற வழியில்லை.. கொரோனா தடுப்பு விதிகளை கடுமையாக்குங்க''.. மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!
டெல்லி: அனைத்து மாநிலங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கடுமையாக்க வேண்டும் என்று மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.
மெத்தனப் போக்குடன் நடந்து கொள்ளும் மக்களிடம் கொரோனா குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா தனது ஆட்டத்தை தொடங்கி விட்டது. ஒரு சில வாரங்களுக்கு முன்பு 15,000-க்குள் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு 30,000-ஐ நெருங்கும் நிலைக்கு வந்து விட்டது. மகாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் நாட்டின் மொத்த பாதிப்பில் 86% பதிவாகி உள்ளது.
இதனால் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் மாநில முதல்வர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் அனைத்து மாநிலங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கடுமையாக்க வேண்டும் என்று மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். அதில், ' கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
எனவே தேவையான கொரோனா தடுப்பு விதிமுறைகளை மாநிலங்கள் கடுமையாக அமல்படுத்த வேண்டும். பொது இடங்களில் விழிப்புணர்வு இல்லாமல் மெத்தனப் போக்குடன் நடந்து கொள்ளும் மக்களிடம் கொரோனா குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அஜய் பல்லா கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications