பாஜக அரசின் கொரோனா தடுப்பூசி திட்டம்....பணமதிப்பிழப்பால் அனுபவித்த அதே அவஸ்தைதான்... ராகுல் சுளீர்
டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நாட்டு மக்கள் அனுபவித்த அதே துயரத்தைத்தான் மத்திய பாஜக அரசின் கொரோனா தடுப்பூசி திட்டத்தால் இப்போதும் அனுபவிக்கின்றனர் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
ராகுல் காந்திக்கு லேசான அறிகுறிகளுடன்ன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

ராகுல் வேண்டுகோள்
மேலும் தம்முடன் தொடர்பில் இருந்தவர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். இதனிடையே மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாகவே ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார்.

ஆக்சிஜன் பற்றாக்குறை
நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை உருவானதற்கு பாஜக அரசை விமர்சித்திருந்தார் ராகுல். அத்துடன் மத்திய பாஜக அரசின் கொரோனா தடுப்பூசி திட்டமானது 2016-ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் மக்களுக்கு எத்தகைய பாதிப்பை இப்போது ஏற்படுத்தி இருக்கிறது எனவும் ஒப்பிட்டு விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி.

நடுத்தெருவில் மக்கள்
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, கொரோனா தடுப்பூசி திருவிழா என்ற மத்திய அரசின் அறிவிப்பால் மக்கள் இப்போது மீண்டும் நீண்ட வரிசைகளில் காத்திருக்க நேரிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது பணம், வாழ்க்கை, பாதுகாப்பு என அனைத்தையும் இழந்து வரிசையில் நிற்க கடைசியாக சில தொழிலதிபர்கள்தான் ஆதாயம் அடைகின்றனர் என்றார்.

மத்திய அரசின் பாரபட்சம்
மேலும் மத்திய அரசின் திட்டத்தால் 18 வயது முதல் 45 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்காமல் போகும். கொரோனா தடுப்பூசிகளின் விலைகள் இடைத் தரகர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி திட்டமானது பாரபட்சமானதாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.












Click it and Unblock the Notifications