ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இன்னமும் அவகாசம் தாங்க மை லார்ட்... உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை!
டெல்லி: தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கூடுதல் கால அவகாசம் தர வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாமதம் செய்கிறார்; நிலுவையில் வைத்துள்ளார்; மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கு கால நிர்ணயம் செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பெஞ்ச்: இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரித்தது. இன்றைய விசாரணையின் போது, தமிழ்நாடு ஆளுநர் 3 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? மசோதாக்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநர்களுக்கு இல்லை; சட்டசபையில் 2-வது முறையாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள் மீது ஆளுநர் என்ன முடிவு எடுப்பார் என்பதில் உச்சநீதிமன்றம் காத்திருக்கிறது. இந்த வழக்கு டிசம்பர் 1-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுஇறது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் தெரிவித்தது.
தமிழ்நாடு அரசு வாதம்: முன்னதாக தமிழ்நாடு அரசு தரப்பில், ஆளுநர் மசோதாக்களை எந்த ஒரு குறிப்பும் இல்லாமல் திருப்பி அனுப்பி இருக்கிறார். ஆளுநரின் ஒவ்வொரு நடவடிக்கையும் சட்டத்தை மீறியதாக இருக்கிறது. ஆளுநர்கள், மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால நிர்ணயம் செய்ய வேண்டும்; மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பாதிக்கப்படுகின்றனர்; ஆளுநர் withhold assent என்ற வெறுமனே சொல்ல முடியாது; அதற்கு காரணத்தை குறிப்பிட வேண்டும் என்கிறது அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவு. என வாதிடப்பட்டது.
மத்திய அரசு வாதம்: மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி ஆஜராகி, ஆளுநர் என்பவர் வெறும் டெக்னிக்கல் சூப்பர்வைசர் கிடையாது. மொத்தம் 182 மசோதாக்களில் 152 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தந்துவிட்டார். தற்போது நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்க கால அவகாசம் தர வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் தந்தே ஆக வேண்டும் என மறைமுகமாக அழுத்தம் தர முடியாது என வாதிட்டார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications