பி.எஸ்.என்.எல். 4ஜி விரிவாக்க சேவைகளில் சீனா கருவிகளை பயன்படுத்த வேண்டாம்- மத்திய அரசு
டெல்லி: பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளில் சீனாவின் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு தடைவிதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லடாக் எல்லையில் சீனாவின் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இத்தாக்குதலைத் தொடர்ந்து இருநாடுகளிடையே போர்ச் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு நிறுவனம் மேற்கொண்டு வரும் விரிவாக்கப் பணிகளில் சீனாவின் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் தற்போது 4 ஜி சேவைகளை வழங்க தீவிரமாக உள்ளது.
Recommended Video
இது தொடர்பான முந்தைய டெண்டர்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. புதிய டெண்டர்களில் சீனாவின் எந்த ஒரு நிறுவனமும் பங்கேற்க முடியாத கட்டுப்பாடுகள் விதிக்கப்படவும் உள்ளனவாம்.












Click it and Unblock the Notifications