சண்டிகர் மேயர் தேர்தல்: வாக்கு சீட்டில் என்ன செஞ்சீங்க.. அதிகாரியை நேரில் விளாசிய உச்சநீதிமன்றம்!
டெல்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரி அனில் மாக்ஷியை நேரில் ஆஜராக வைத்து சரமாரியாக கேள்விகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் எழுப்பி கண்டனம் தெரிவித்தது. மேலும் இந்த விசாரணையின் போது வாக்கு சீட்டில் என்ன செய்தீர்கள்? வீடியோவில் தான் எல்லாமே பதிவாகி இருக்கிறதே எனவும் கண்டனம் தெரிவித்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநிலங்களுக்கு பொது தலைநகராக இருப்பது சண்டிகர். இதன் மாநகராட்சி மேயர் தேர்தல் அணையில் நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக ஒரு பக்கம், இந்தியா கூட்டணியின் ஆம் ஆத்மி- காங்கிரஸ் இன்னொரு பக்கம் களம் கண்டன.

இத்தேர்தலை பாஜகவை சேர்ந்த அதிகாரி அனில் மாக்ஷி நடத்தினார். இத்தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு 16 ஓட்டுகளும் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு 20 ஓட்டுகளும் கிடைத்தன. ஆனால் இந்தியா கூட்டணியின் 8 ஓட்டுகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அனில் மாக்ஷி அறிவித்தார். இதனால் பாஜக வேட்பாளர் மேயர் தேர்தலில் வென்றதாகவும் அறிவிக்கப்பட்டு அப்போதே மேயர் நாற்காலியில் அமரவும் வைக்கப்பட்டார். இந்த அப்பட்டமான தேர்தல் முறைகேடு பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
மேலும் வாக்குச் சீட்டுகளில் தேர்தல் அதிகாரி அனில் மாக்ஷி குறியீடுகளை பதிவு செய்யும் வீடியோவும் வெளியானது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச், சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயகப் படுகொலை நடந்துள்ளதாக கடுமையாக கண்டனம் தெரிவித்தது. மேலும் தேர்தல் நடத்திய அதிகாரி அனில் மாக்ஷி ஆஜராகவும் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து சண்டிகர் மேயர் பதவிக்கு மறுதேர்தல் நடத்த வேண்டாம்; ஏற்கனவே நடந்த தேர்தலில் பதிவான வாக்கு சீட்டுகளை வைத்து மறு எண்ணிக்கை நடத்தலாம்; ஆனால் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராத ஒரு அதிகாரி இத்தேர்தலை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரி அனில் மாக்ஷி மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், பதிவான வாக்கு சீட்டுகளுடன் உயர்நீதிமன்ற பதிவாளர் நாளை ஆஜராகவும் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து சண்டிகர் மேயர் பதவிக்கு மறுதேர்தல் நடத்த வேண்டாம்; ஏற்கனவே நடந்த தேர்தலில் பதிவான வாக்கு சீட்டுகளை வைத்து மறு எண்ணிக்கை நடத்தலாம்; ஆனால் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராத ஒரு அதிகாரி இததேர்தலை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரி அனில் மாக்ஷி மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், பதிவான வாக்கு சீட்டுகளுடன் உயர்நீதிமன்ற பதிவாளர் நாளை ஆஜராகவும் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications