சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் மத்திய அரசு பணிக்கு மாற்றம்!
டெல்லி: தமிழக ஐபிஎஸ் அதிகாரி சுதாகர் மத்திய பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த சுதாகர் ஐபிஎஸ், மத்திய போதைப்பொருள் தடுப்பு துணை இயக்குனர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை அவர் துணை இயக்குனராக பதவி வகிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
நிர்வாக சீர்திருத்தங்கள் காரணமாக அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பொறுப்பில் உள்ள அதிகாரிகள் மாற்றப்படுகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழக ஐபிஎஸ் அதிகாரி சுதாகர் மத்திய பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமிழக அரசில், சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்தவர் சுதாகர். தற்போது இவர் மத்திய போதைப்பொருள் தடுப்பு துணை இயக்குனர் ஜெனரலாக பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை சுதாகர் துணை இயக்குனராக பதவி வகிப்பார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தார். இவர் மத்திய இளைஞர் விவகாரத்துறை இயக்குனராக பதவி மாற்றம் செய்யப்பட்டிருந்தார். வந்திதா பாண்டேவுக்கும் திருச்சி டிஐஜி வருண் குமாரும் திருமணம் செய்து கொண்டனர். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்தவரான வந்திதா பாண்டே 2011 ஆம் ஆண்டு ஐபிஎஸ் ஆக தேர்ச்சி பெற்று தமிழகத்தில் பணியாற்றி வந்தார்.
2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, கரூரில் எஸ்பியாக பதவி வகித்த வந்திதா பாண்டே, கண்டெய்னரில் வந்த ரூ.570 கோடியை மடக்கி பிடித்த சம்பவத்தில் உறுதுணையாக இருந்தார். இதேபோன்று அதே தேர்தலில், முக்கிய அரசியல்வாதியின் பினாமி வீட்டில் பணப்பட்டுவாடா செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.4 கோடியை பறிமுதல் செய்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications