Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமர் படம் போட்ட பேப்பர் பிளேட்டில் சிக்கன் பிரியாணி.. கொந்தளித்த இந்து அமைப்பினர்.. டெல்லியில் பரபர

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்ட பேப்பர் பிளேட்டில் கடவுள் ராமர் படம் இடம்பெற்றிருந்த தகவல் அங்கு காட்டுத்தீ போல பரவியது. இதனால், சில இந்து அமைப்புகள் அந்த பிரியாணி கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவில் மக்களின் விருப்பமான உணவுகளில் ஒன்றாக பிரியாணி உள்ளது. பெரு நகரங்கள் முதல் சிறிய நரங்கள் வரை பிரியாணி கடைகள் இல்லாத பகுதிகளே பார்க்க முடியாது. மதிய வேளைகளில் பிரியாணி கடைகளில் விற்பனை களை கட்டும்.. தலைநகர் டெல்லியும் இதற்கு விதி விலக்கு இல்லை.

Chicken biryani on a paper plate with God Ram picture sparks row in delhi

முக்கிய பகுதிகளில் பிரியாணி கடைகள் ஆங்காங்கே போடப்பட்டு படு ஜோராக விற்பனை நடைபெற்று வரும். அந்த வகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரி பகுதியில் உள்ள பிரியாணி கடைகளில் பிரியானி விற்பனை நடைபெற்று வந்தது. அப்போது அங்குள்ள பிரியாணி கடை ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறப்பட்ட பேப்பர் பிளேட்டில் கடவுள் ராமரின் படம் இருந்துள்ளது.

சிக்கன் பிரியாணி வழங்கப்பட்ட பேப்பர் பிளேட்டில் கடவுள் ராமர் படம் இடம்பெற்றிருந்த தகவல் அங்கு காட்டுத்தீ போல பரவியது. இதனால், சில இந்து அமைப்புகள் அந்த பிரியாணி கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாருக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த போலீசார், கடை உரிமையாளரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:- கடை உரிமையாளர் மொத்த வியாபாரி ஒருவரிடம் இருந்து பேப்பர் பிளேட்களை மொத்தமாக வாங்கியுள்ளார். இதில் சில பேப்பர் பிளேட்களில் கடவுள் ராமரின் படம் இருந்துள்ளது. ராமாயண கதை தொடர்பான புத்தகத்தில் இருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட பேப்பரை பயன்படுத்தி பேப்பர் பிளேட் தயாரிக்கப்பட்டதால், சில பிளேட்களில் ராமர் படங்கள் எதேச்சையாக இடம்பெற்றிருக்கின்றன.

கடை ஊழியர்களிடம் உணவு கொடுக்கும் போது ராமர் படம் இருந்ததை கவனிக்காமல் வாடிக்கையாளர்களுக்கு சிக்கன் பிரியாணியை வைத்து கொடுத்து இருக்கிறார்கள்" என்றனர். கடை உரிமையாளரை 107/151 பிரிவின் கீழ் தடுப்புக்காவலில் வைத்த போலீசார் அதே நாளில் விடுதலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீசார் விளக்கம் அளித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+