பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்.. பேசப்போவது என்ன?
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார். பிரதமர் மோடியை மு.க ஸ்டாலின் சந்தித்து பேச இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இதன் பின்னர் டெல்லி விமான நிலையத்தில் மாலை 6 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். நேற்று பிற்பகல் அளவில் டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு டி.ஆர் பாலு, திருச்சி சிவா உள்ளிட்ட திமுக எம்பிக்கள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, தமிழ்நாடு இல்லம் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.

பிறகு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இந்த சந்திப்பின் போது, தற்போதைய அரசியல் சூழல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தல், இந்தியா கூட்டணி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சென்ற முதல்வர் ஸ்டாலின், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாட்டு சுற்றுலா பயணி பரமேஸ்வரனை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிலையில், டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.
நிதி ஆயோக் கூட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடியை ஸ்டாலின் சந்தித்து பேசி வருகிறார். இதில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி குறித்து கேட்கப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து மாலை 6 மணிக்கு டெல்லி விமான நிலையம் முன்பு ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் பரபரப்புக்கு இடையே பிரதமர் மோடியை - ஸ்டாலின் சந்தித்து பேச வாய்புள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் தமிழக அரசியல் வட்டாரத்திலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் தனது டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இரவு 7.30 மணியளவில் தமிழ்நாடு திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications