ஜம்மு காஷ்மீருக்குள் பயங்கர ஆயுதங்கள்...பதற்றம் ஏற்படுத்த பாகிஸ்தானுக்கு சீனா உத்தரவு!!
டெல்லி: இந்திய சீனா எல்லையில் ஏற்கனவே பதற்றம் நிலவி வருகையில், ஜம்மு காஷ்மீரில் பதற்றத்தை உருவாக்கும் வகையில், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கொண்டு சென்று தாக்குதல் நடத்துமாறு பாகிஸ்தானை சீனா வலியுறுத்தி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் ஜம்மு காஷ்மீர் பகுதிக்குள் ஆயுதங்களை கொண்டு செல்லுமாறு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு சீனா கட்டளையிட்டு இருப்பதாக புலனாய்வுக்கு கிடைத்து இருக்கும் தகவலில் தெரிய வந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டு இருப்பது இதை உறுதிபடுத்துவதாக உள்ளது.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் செய்தியில், ''எல்லையில் பலத்த பாதுகாப்பு பணியில் இந்திய பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளதால், தீவிரவாதிகளால் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவ முடியவில்லை மேலும், ஆயுதங்களையும் கடத்த முடியவில்லை.
தற்போது குளிர்காலத்தை எதிர்கொண்டு இருக்கும் நிலையில், அதிகபட்சம் எவ்வளவு ஆயுதங்களை ஜம்மு காஷ்மீருக்குள் கொண்டு செல்ல முடியுமோ, கொண்டு செல்ல வேண்டும் என்று பாகிஸ்தான் ஐஎஸ்ஐக்கு சீனா உத்தரவு பிறப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. குளிர்காலத்தில் சருகுகள் கருகிவிடும் என்பதால் இந்த சந்தர்ப்பத்தை ஆயுதங்கள் கடத்துவதற்கு பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்திய ராணுவம் செய்துள்ளது. ட்ரோன்ஸ் மூலம் ஆயுதங்களை அனுப்பலாம் என்பதால், எல்லையில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் அமர்த்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால், பாகிஸ்தான் சீனாவின் வலியுறுத்தலின்பேரில் ட்ரோன்களில் ஆயுதங்களை அனுப்பலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜம்முவில் இருந்து தெற்கு காஷ்மீருக்கு மஹிந்திரா பொலேரோ வாகனத்தில் ஆயுதங்ககளை கடத்தி வந்துள்ளனர். இவர் அனைத்தும் சீனாவில் தயாரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்திய சீனா எல்லையில் இன்னும் பதற்றம் முடிவுக்கு வராத நிலையில், பாகிஸ்தான் வாயிலாகவும் அச்சுறுத்தலில் ஈடுபடுவதற்கு சீனா முயற்சித்து இருப்பது இந்தியாவுக்கு எல்லையில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications