சுசுலில் கைப்பற்றிய மலைகளில் இருந்து வெளியேற சொல்லும் சீனா.. இந்தியா கொடுத்த பதிலடி
டெல்லி: பாங்காங் த்சோவில் கைப்பற்றிய மலைப்பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. இதற்கு பதில் அளித்த இந்தியா ஏப்ரல் மாத நிலவரப்படி சீன படைகள் பழைய நிலைக்குதிரும்ப வேண்டும் என்று கோரியுள்ளது. லடாக்கில் எல்ஓசியில் இராணுவ மோதல்களை தீர்க்க புதிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே இந்தியாவோ, இருவரும் ஒரே நேரத்தில் படைகளை திரும்ப பெறலாம் என்று வலியுறுத்தியுள்ளது. லடாக் எல்லையில் சீன வீரர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா "ஏழு இடங்களை" வசப்படுத்தியது.
ஆகஸ்ட் மாத இறுதியில் சுசுல் சப் செக்டாரில், ரோந்துப் பாய்ண்டுக்கு அப்பால், இந்தியப் படைகள் 7 மலைகளை கைப்பற்றிய பின்னர் சீனா, இந்தியாவிடம் அந்த இடங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

தெற்கு கரை இந்தியா
இந்தியா கைப்பற்றிய மலைப்பகுதிகள் பாங்கோங் த்சோவின் தென் கரையில் உள்ளன. இந்தியாவால் இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்த உதவுகிறது. இதனால் சீன படையினரால் அங்கு எதுவும் செய்ய முடியாத அளவிற்கு பலமாக இந்தியா உள்ளது. ஆனால் வடக்கு கரையில் சீனா பலமாக உள்ளது.

ஒரே நேரத்தில் வெளியேறுவோம்
இதனால் தான் சீனா பாங்கோங் த்சோவின் தென் கரையை விட்டு வெளியேற வேண்டும் என்று இந்தியாவிடம் கோரி வருகிறது. இதற்கு இந்தியா, வடக்கு கரையில் இருந்து நீங்கள் ஒதுங்குங்கள் என்று வலியுறுத்தி வருகிறது. ஏப்ரல் மாதம் இருந்த நிலைக்கு பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட பகுதியில இரு கரையில் இருந்தும் இரு நாடுகளும் ஒரே நேரத்தில் படைகளை விலக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

அமைதி நிலவுகிறது
கடந்த திங்கட்கிழமை இந்திய மற்றும் சீன ராணுவ தளபதிகளுக்கு இடையிலான ஏழாவது சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மே மாத தொடக்கத்தில் இருந்த நிலைக்கு இருபடைகளும் திரும்பி செல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தற்போது அங்கு அமைதி நிலவுகிறது.

விலகாத மர்மம்
முன்னதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் சீனாவின் "பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருநாடுகளும் அமைதியை விரும்புவதாகவே தெரிவித்தன. ஆனால் சீனாவோ ஏன் திடீரென படைகளை குவித்து ஆக்கிரமித்தது என்பதற்கான காரணங்கள் மட்டும் இன்னும் மர்மமாகவே உள்ளது.

சமாதானம்
லடாக்கில் வெப்பநிலை குறைந்து வருவதால், இருபுறமும் ராணுவ வீரர்கள் கடுமையான குளிர்காலத்தில் அந்த இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது கடும் சிரமமான காரியம் ஆகும். இப்போதைய நிலையில் சமாதானத்தையே இரு தரப்பும் விரும்புகின்றன.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி












Click it and Unblock the Notifications