சீனா அதிபர் ஜின்பிங் அக்.11,12-ல் இந்தியா வருகை- வெளியுறவுத் துறை அமைச்சகம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    2000 வருட பந்தம்.. தமிழர் பெருமை.. சீன அதிபர் வருகைக்கு மகாபலிபுரத்தை தேர்வு செய்தது ஏன்?

    டெல்லி: சீனா அதிபர் ஸி ஜின்பிங்கை அக்டோபர் 11,12 ஆகிய நாட்களில் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஜின்பிங் இடையேயான 2-வது சந்திப்பு அக்டோபர் 11 முதல் 12-ந் தேதி வரை நடைபெறும்.

    Chinese president Xi Jinping to meet PM Modi on Oct 11-12

    இச்சந்திப்பின் போது பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர். இச்சந்திப்பு மாமல்லபுரத்தில் அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இச்சந்திப்பின் போது எந்த வித ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு அக்டோபர் 13-ல் ஜின்பிங் நேபாளத்துக்கு அரசு முறை பயணமாக செல்கிறார்.

    வரவேற்க தயாராகும் மாமல்லபுரம்

    இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்காக கடற்கரை நகரமான மாமல்லபுரம் கோலாகலமாக தயாராகி வருகிறது. மாமல்லபுரத்தில் புராதான சிற்பங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சாலையோரக் கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. அந்த இடங்களில் புதியதாக சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் தலைவர்களின் சந்திப்பு நாட்களில் மாமல்லபுரம் வருவதை தவிர்க்க வேண்டும் என தங்கும் விடுதி உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையிலும் இருதலைவர்களையும் வரவேற்க மாமல்லபுரம் ஆவலுடன் களைகட்டி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+