NSE சித்ரா ராமகிருஷ்ணனின் கூட்டாளி ஆனந்த் சுப்பிரமணியன்தான் மர்ம தமிழ் சாமியாரா? சிபிஐ சந்தேகம்
டெல்லி: நாட்டையே அதிரவைத்த தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் குறிப்பிடும் மர்ம சாமியார் அவரது கூட்டாளியான ஆனந்த் சுப்பிரமணியன்தானா? என சிபிஐ அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பொருளாதார மையங்களில் ஒன்று தேசிய பங்கு சந்தை. இதன் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்த சித்ரா, அனைத்து நிர்வாக விவகாரங்களும் சாமியார் ஒருவரது மெயிலுக்கு அனுப்பி இருக்கிறார்.

அந்தரங்க விவகாரங்கள்
அத்துடன் சாமியாருடன் மிக நெருக்கமாகவும் இருப்பதாக அதிகாரிகள் வெளியிட்டிருக்கும் இ மெயில் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைமுடியை சீர் செய்வது, செசல்ஸ் நாட்டுக்கு சுற்றுலா செல்வது, செசல்ஸ் கடற்கரையில் குளியல் போடுவது உள்ளிட்ட விவகாரங்களும் அந்த இ மெயிலில் கொட்டி கிடக்கின்றன.

சித்ராவின் ரிப்பீட்டு
இந்த நிலையில் சித்ராவை சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது தமக்கு அந்த சாமியார் யார் என்று அடையாளம் தெரியாது; அவரே தமது வழிகாட்டி; அவர் இமயமலை யோகி என்றெல்லாம் புரூடா விட்டிருக்கிறார். ஆனாலும் சிபிஐ அதிகாரிகள் இதனை நம்ப தயாரில்லை. சித்ராவோ இதே பல்லவியைத்தான் பாடி வருகிறார் என்கின்றன சிபிஐ வட்டாரங்கள்.

ஆனந்த் சுப்பிரமணியன் மீது சந்தேகம்
இதனிடையே சித்ராவால் தேசிய பங்கு சந்தைக்குள் மிக அதிகமான ஊதியத்துக்கு அழைத்துவரப்பட்ட ஆனந்த் சுப்பிரமணியன் மீதும் சிபிஐ அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஆனந்த் சுப்பிரமணியன்தான் அந்த மர்ம சாமியாராக இருக்கலாம் என்பதும் சிபிஐ சந்தேகம். சாமியார் பெயரில் சித்ராவும் ஆனந்த் சுப்பிரமணியனும் மெகா சீரியலை நடத்தி வருகிறார்களா? எனவும் குழம்பி போயுள்ளனர் சிபிஐ அதிகாரிகள்.

சித்ராவின் கூட்டாளி
ஆனால் சித்ரா, சாமியாருக்கு அனுப்பிய சில மெயில்களை ஆனந்த் சுப்பிரமணியன் காபி செய்து வைத்திருக்கிறார். அவர் ஏன் இந்த இ மெயில்களை காபி செய்து வைத்தார்? என்கிற கேள்விக்கும் இதுவரை விடை கிடைக்கவில்லை. சித்ரா ராமகிருஷ்ணன் வாயை திறந்து உண்மையை சொல்ல மறுத்தும் வருகிறார். சித்ராவும் ஆனந்த் சுப்பிரமணியனும் கூட்டாளிகளாக இணைந்து செயல்பட்டு இன்னும் எத்தனை மோசடிகளை அரங்கேற்றி இருக்கின்றனரோ? எனவும் விசாரிக்கப்படுகிறதாம். அனேகமாக இந்த மர்ம முடிச்சை விரைவில் சிபிஐ அதிகாரிகள் அவிழ்த்து நாட்டை அதிர வைப்பார்கள் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications