மாநில அரசின் கையில் ஒன்னும் இல்லை.. எதுவும் செய்ய முடியாது.. குடியுரிமை சட்டத்திற்கு இவ்வளவு பலமா!
குடியுரிமை சட்டத்தை சில மாநில அரசுகள் எதிர்த்தாலும் கூட அதை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
டெல்லி: குடியுரிமை சட்டத்தை சில மாநில அரசுகள் எதிர்த்தாலும் கூட அதை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. மத்திய அரசின் சட்டம் இது என்பதால் இதை கண்டிப்பாக மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தியாக வேண்டும்.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதா பெரும் எதிர்ப்பலைகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் மசோதாவிற்கு எதிராக நாடு முழுக்க பல மாநில தலைவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்க தொடங்கி உள்ளது.
மசோதாவாக இருந்த சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு பின் அதிகாரபூர்வ சட்டமாக்கி உள்ளது. இதற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 5 நாட்களாக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அனுமதி இல்லை
இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று என்று கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகள் அறிவித்து இருக்கிறது. மத்திய அரசு வேண்டுமானால் இந்த சட்டத்தை கொண்டு வந்து இருக்கலாம், ஆனால் நாங்கள் இந்த சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று இவர்கள் கூறி உள்ளனர்.

என்ன உண்மை
ஆனால் உண்மையில் இந்த சட்டத்தை மொத்தமாக மாநில அரசுகள் எதிர்க்க முடியாது. இந்திய அரசியலைப்பில் மாநில கட்டுப்பாட்டில் இருக்கும் சட்டங்கள், மத்திய கட்டுப்பாட்டில் இருக்கும் சட்டங்கள் என்று நிறைய சட்டங்கள் இருக்கிறது. அந்த வகையில் குடியிரிமை சட்டம் மத்திய கட்டுப்பாட்டிலிருக்கும் சட்டம் ஆகும்.

என்ன சட்டம்
சட்டபிரிவு 256 மற்றும் 257ன் படி இந்த சட்டம் முழுக்க முழுக்க மத்திய அரசு மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும். இதை மாநில அரசுகள் எதிர்க்க முடியாது. இந்தியாவின் அனைத்து மாநிலத்திற்கும் இந்த சட்டம் பொருந்தும். உதாரணமாக பாஸ்போர்ட் விதிகள் மத்திய அரசு விதியாக இருந்தாலும் மாநில அரசு இதற்கு கட்டுப்படுவது போல. அதனால் இந்த சட்டம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பலமான ஒரு சட்டம் ஆகும்.

உதவி தேவை
அதே சமயம் இந்த சட்டத்தை மாநில அரசின் உதவி இல்லாமல் மத்திய அரசால் செயல்படுத்த முடியாது. அதாவது மாவட்ட கலெக்டர்கள், வட்டாச்சியர்கள், போலீசார் ஆகிய மாநில அரசின் நிர்வாக பணியாளர்கள் உதவியுடன்தான் இந்த சட்டத்தை செயல்படுத்த முடியும். இவர்கள்தான் ஒரு பகுதியில் உள்ள இஸ்லாமியர்களை கணக்கிட்டு, அவர்களிடம் பத்திரங்கள், ஆவணங்களை வாங்க முடியும்.

போலீஸ்
அதன்பின் இவர்களை மாநில போலீசார் சோதனை செய்ய வேண்டும். எப்படி பாஸ்போர்ட் வெளியுறவுத்துறை மூலம் வழங்கப்பட்டாலும், தமிழக போலீஸ் சோதனை செய்கிறதோ அப்படிதான் இந்த சட்டமும். அதனால் இந்த சட்டத்தை முழுக்க செயல்படுத்த வேண்டும் என்றால் மாநில அரசின் உதவியும் தேவை.

கண்டிப்பாக அவசியம்
கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று உறுதியாக கூறிவிட்டது.இது போன்ற மாநிலங்களில் அரசின் உதவி இன்று மத்திய அரசு எப்படி இந்த குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றும். அரசு என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications