தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் வழக்கு.. பொய்யான செய்திகள் வலம் வருவதாக நீதிமன்றம் வருத்தம்!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் நீதிபதி போட்பேவை நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட் மற்றும் ஆர்எஸ் நாரிமன் ஆகியோர் சந்தித்தாக தகவல் வெளியானது.
டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் நீதிபதி போட்பேவை நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட் மற்றும் ஆர்எஸ் நாரிமன் ஆகியோர் சந்தித்தாக தகவல் வெளியானது. இந்த தகவலை தற்போது உச்ச நீதிமன்றம் பொய் என்று கூறி மறுப்பு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது 35 வயதாகும் பெண் பாலியல் ஒருவர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் அளித்த பெண், ஜூனியர் பணியாளாக உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி வந்தவர்.
இந்த புகார், நீதிமன்ற உள்விசாரணையாக நடக்கிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போட்பே, இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி அமர்வு இதை விசாரிக்கிறது.

மாட்டேன்
ஆனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண், அதன் மீதான விசாரணையில் ஆஜராக மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். நான் இனி இந்த விசாரணையில் கலந்து கொள்ள மாட்டேன். என்னிடம் அதற்கான தைரியம் கிடையாது என்று இவர் தெரிவித்துள்ளார். செவ்வாய் வரை இந்த விசாரணை நடக்க உள்ளது.

என்ன கடிதம்
இந்த நிலையில் இந்த வழக்கில் அந்த புகார் அளித்த பெண் ஆஜராகாதது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி டி ஒய் சந்திரசூட், உச்ச நீதிமன்ற நீதிபதி போட்பேக்கு கடிதம் எழுதியதாக தகவல் வந்தது. அதாவது புகார் அளித்த பெண் ஆஜராகாமல் இந்த வழக்கில் விசாரணை நடத்துவது தவறு, அது நீதிமன்ற மான்பை கெடுக்கும் என்று சந்திரசூட் குறிப்பிட்டதாக செய்திகள் வந்தது.

என்ன சந்திப்பு
மேலும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட் மற்றும் ஆர்எஸ் நாரிமன் இது தொடர்பான வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி போட்பேவை சந்தித்ததாகவும் கூறப்பட்டது. கடிதத்தில் இருந்த புகாரை அவர்கள் நேரடியாக, உச்ச நீதிமன்ற நீதிபதி போட்பேவை சந்தித்து அளித்தனர் என்று ஆங்கில ஊடகங்களில் செய்தி வந்தது.

என்ன மறுப்பு
ஆனால் இதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி போட்பேவை யாரும் வந்து சந்திக்கவில்லை என்று நீதிமன்றம் கூறி உள்ளது. இந்த பொய்யான செய்திகள் பரப்பப்படுவது வருத்தம் அளிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதி டி ஒய் சந்திரசூட், போட்போவிற்கு கடிதம் எழுதினாரா என்பது குறித்து எந்த விதமான விளக்கமும் அளிக்கப்படவில்லை.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications