தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் வழக்கு.. பொய்யான செய்திகள் வலம் வருவதாக நீதிமன்றம் வருத்தம்!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் நீதிபதி போட்பேவை நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட் மற்றும் ஆர்எஸ் நாரிமன் ஆகியோர் சந்தித்தாக தகவல் வெளியானது.
டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் நீதிபதி போட்பேவை நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட் மற்றும் ஆர்எஸ் நாரிமன் ஆகியோர் சந்தித்தாக தகவல் வெளியானது. இந்த தகவலை தற்போது உச்ச நீதிமன்றம் பொய் என்று கூறி மறுப்பு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது 35 வயதாகும் பெண் பாலியல் ஒருவர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் அளித்த பெண், ஜூனியர் பணியாளாக உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி வந்தவர்.
இந்த புகார், நீதிமன்ற உள்விசாரணையாக நடக்கிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போட்பே, இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி அமர்வு இதை விசாரிக்கிறது.

மாட்டேன்
ஆனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண், அதன் மீதான விசாரணையில் ஆஜராக மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். நான் இனி இந்த விசாரணையில் கலந்து கொள்ள மாட்டேன். என்னிடம் அதற்கான தைரியம் கிடையாது என்று இவர் தெரிவித்துள்ளார். செவ்வாய் வரை இந்த விசாரணை நடக்க உள்ளது.

என்ன கடிதம்
இந்த நிலையில் இந்த வழக்கில் அந்த புகார் அளித்த பெண் ஆஜராகாதது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி டி ஒய் சந்திரசூட், உச்ச நீதிமன்ற நீதிபதி போட்பேக்கு கடிதம் எழுதியதாக தகவல் வந்தது. அதாவது புகார் அளித்த பெண் ஆஜராகாமல் இந்த வழக்கில் விசாரணை நடத்துவது தவறு, அது நீதிமன்ற மான்பை கெடுக்கும் என்று சந்திரசூட் குறிப்பிட்டதாக செய்திகள் வந்தது.

என்ன சந்திப்பு
மேலும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட் மற்றும் ஆர்எஸ் நாரிமன் இது தொடர்பான வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி போட்பேவை சந்தித்ததாகவும் கூறப்பட்டது. கடிதத்தில் இருந்த புகாரை அவர்கள் நேரடியாக, உச்ச நீதிமன்ற நீதிபதி போட்பேவை சந்தித்து அளித்தனர் என்று ஆங்கில ஊடகங்களில் செய்தி வந்தது.

என்ன மறுப்பு
ஆனால் இதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி போட்பேவை யாரும் வந்து சந்திக்கவில்லை என்று நீதிமன்றம் கூறி உள்ளது. இந்த பொய்யான செய்திகள் பரப்பப்படுவது வருத்தம் அளிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதி டி ஒய் சந்திரசூட், போட்போவிற்கு கடிதம் எழுதினாரா என்பது குறித்து எந்த விதமான விளக்கமும் அளிக்கப்படவில்லை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications