Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாட்ஜிபிடி AI கிட்ட கேட்டு ஹாயாக ஹோம்வொர்க் எழுதிய மாணவன்! ஒரே ஒரு வரியால சிக்கியது எப்படி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் சாட்ஜிபிடியை பயன்படுத்தி வீட்டுப்பாடம் எழுதிய நிலையில் அது சரியாக இருந்த போதிலும் அவர் ஆசிரியரிடம் சிக்கியுள்ளார். இந்த சுவாரஸ்யமான சம்பவம் எப்படி நடந்தது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு. இந்த தொழில்நுட்பத்திற்கு வருங்காலத்தில் கிராக்கி அதிகம் என்பதால் பிளஸ் 2 முடித்தவர்கள் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு பாடப்பிரிவை எடுத்து படிக்கிறார்கள்.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் சாட்ஜிபிடி (ChatGPT) என்ற செயற்கை நுண்ணறிவு சாட்பாட் உருவாகியுள்ளது. இதன் மூலம் நாம் வைக்கும் கோரிக்கைகளுக்கும் கேள்விகளுக்கும் விடை கொடுக்கும் வகையில் உள்ள ஒரு கருவியாகும்.

Class 7 student got caught to his teacher after using ChatGPT for his homework

இந்த சாட்ஜிபிடியை வைத்து கடிதங்களை எழுதுவது, பள்ளி, கல்லூரிகளுக்கான கட்டுரைகள், கதைகள், அடிப்படையில் இசையை அமைப்பது போன்றவற்றை செயல்படுத்தலாம். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பல்கலைக்கழக மாணவர், 20 நிமிடங்களில் 2000 வார்த்தைகளை கொண்ட கட்டுரையை சாட்ஜிபிடி உதவியுடன் எழுதி அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தானாகவே சாட்ஜிபிடி மூலம் ஒரு இமெயில் கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து வந்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. அண்மையில் 7ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது ஆங்கில வீட்டுப்பாடத்தை எழுத செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தியுள்ளார்.

அதை அவர் பயன்படுத்திதான் வீட்டுப்பாடத்தை எழுதினார் என்பதை ஆசிரியர் ஏதோ நேரில் இருந்து பார்த்தது போல் கண்டுபிடித்துவிட்டார். நாம் வீட்டுபாடத்தை வீட்டில்தானே எழுதினோம். யார் வாத்தியாரிடம் போட்டுக் கொடுத்திருப்பார்கள் என்ற சந்தேகத்துடன் இருந்திருந்தார். பின்னர்தான் தெரிந்தது ஈயடிச்சான் காப்பி போல் அவர் காப்பி அடித்த காரியம்தான் அவர் சிக்கியதற்கு காரணம்.

அதாவது கட்டுரையை எழுதிக் கொண்டே இருந்த அந்த சிறுவன் "As an AI language model, I dont have personal expectations or opinions" என்ற வாக்கியத்தையும் சேர்த்து எழுதிவிட்டார். இதை வைத்துத்தான் அந்த மாணவருடைய ஆசிரியர் அந்த மாணவர் சாட்ஜிபிடியை பார்த்து ஹோம்வொர்க் செய்துவிட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

Class 7 student got caught to his teacher after using ChatGPT for his homework

இதை அறிந்த ஏ.ஆர்.ரஹ்மான் வருங்காலத்திற்கு வரவேற்கிறேன் என நகைச்சுவையாக ட்வீட் போட்டுள்ளார். இந்தியாவில் நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வில் தோல்வியடைந்த சாட்ஜிபிடி, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் மாஸ்டர் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (MBA) திட்டத்தின் இறுதித் தேர்விலும், அமெரிக்க மருத்துவத் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+