இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம்
டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் பங்கெற்று பேசிய அக்கட்சியின் நிறுவனர் ஆபிஜித் தீப்கே தனது முதல் உரையில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். நாட்டின் இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள் எனவும், கரப்பான் பூச்சிகள் கூட ஒருபோதும் அஞ்சுவதில்லை, அவை ஒருபோதும் அழிவதுமில்லை என்று ஆவசேமாக பேசினார்.
நீட், சிபிஎஸ்இ உள்ளிட்ட தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் கல்வித்துறையில் நிலவும் முக்கிய பிரச்சனைகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் அறிவித்தது.

அமெரிக்காவில் இருந்து இன்று காலை டெல்லி வந்த ஆப்ஜித் தீப்கே, போராட்ட களத்திற்கு வந்தார். போராட்டத்தில் பங்கேற்க வருபவர்கள் கையில் புத்தகம் மற்றும் மூவர்ணக்கொடியுடனும் வருகை தர வேண்டும் என்று கோரியிருந்தார். போலீஸாரும் போராட்டத்திற்கு அனுமதி கொடுத்த நிலையில், காலையில் இருந்தே அங்கு இளைஞர்கள் குவிய தொடங்கினர். பதாகைகளை ஏந்தியபடி போராட்ட இடத்திற்கு வந்து இருந்தனர்.
கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே தனது கையில் அம்பேத்கரின் சுயசரிதை புத்தகத்தை வைத்திருந்தார். போராட்டத்தில் பங்கேற்று பேசிய ஆப்ஜித் தீப்கே, நாட்டில் உள்ள இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள். அவர்கள் போராடுவார்கள். கரப்பான்பூச்சிகளுக்குக் கூட பயம் இல்லை. அவை எளிதில் அழிவதுமில்லை. நண்பர்களே, இது ஒரு நீண்ட கால போராட்டம்.
அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஒரு மாதம் ஆகிறது. ஆனால், அவர்கள் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக எங்கள் கணக்குகளை ஹேக் செய்வது, எங்கள் பதிவுகளை நீக்கச் செய்வது போன்ற செயல்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். நீங்கள் எங்கள் பதிவுகளை நீக்க முடியும்; ஆனால் இந்த இடத்திலிருந்து எங்களை அழிக்க முடியாது" என ஆவேசமாக கூறினார். கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் அடுத்த போராட்டம் வரும் 23 ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications