ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறப்பு.. மத்திய அரசு
டெல்லி: நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலையடுத்து நாடு முழுவதும் பள்ளிகள்,கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கடந்த 45 நாட்களுக்கும் மேலாக இவை மூடப்பட்டுள்ளது. கல்லூரிகளை பொருத்தவரை ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

அது போல் 2020-2021 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, கல்லூரிகள் திறப்பு ஒத்தி போகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நாடு முழுவதும் தற்போது 3-ஆவது முறையாக லாக்டவுன் அமலில் உள்ள நிலையில் மத்திய அரசு சில தளர்வுகளை அளித்துள்ளது.
அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவை திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அது போல் முதலாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளது.
கடந்த மாத இறுதியில் கல்லூரிகள் திறப்பு மற்றும் ஒத்தி வைக்கப்பட்ட பருவத் தேர்வுகளை நடத்துவது குறித்து யூஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) இரு குழுக்களை அமைத்தது. அந்த குழுக்களின் பரிந்துரையின்படி இது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. பருவத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications