நிம்மதி... கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது
டெல்லி: உலக நாடுகளில் கொரோனாவின் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது.
Recommended Video
உலகின் அனைத்து நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் மிக மோசமாக இருந்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33, 20,537 ஆகும்.

உலக நாடுகளில் கொரோனா குடித்த மனித உயிர்கள் எண்ணிக்கை 2,34,392 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 10, 49,252 ஆக உயர்ந்திருக்கிறது.
இது உலக நாடுகளை ஆறுதல் அடைய வைத்திருக்கிறது. 63 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மரணித்த அமெரிக்காவில் 1,55,737 பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் 10,95,304 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அமெரிக்காவை தொடர்ந்து ஸ்பெயினில் 1,37,984 பேர் கொரோனாவிடம் இருந்து மீண்டிருக்கின்றனர். இதேபோல் ஜெர்மனியில் 1,26,900 பேர் கொரோன பிடியில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.
இத்தாலியில் 75,945 பேரும் ஈரானில் 75,103; பிரான்ஸில் 49,476 பேரும் கொரோனாவில் இருந்து மீண்டிருக்கின்றனர். சீனாவில் 77,642 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்.












Click it and Unblock the Notifications