குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை(யை)விட்டார்.. திடீரென விழித்த காங். - ம.பி.க்கு தலைவர்கள் படையெடுப்பு!
டெல்லி/ போபால்: மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் 22 எம்.எல்.ஏக்களை தக்க வைக்க முடியாத காங்கிரஸ் தற்போது திடீரென பிரச்சனைக்கு தீர்வு காண தலைவர்களை போபாலுக்கும் பெங்களூருக்கும் அனுப்பி வைத்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் கமல்நாத்தின் பிடிவாதத்தால்தான் ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியை விட்டே வெளியேறி விட்டார். முதல்வர் பதவியை எதிர்பார்த்தவர் சிந்தியா. அதை மேலிட செல்வாக்கால் தட்டிப் பறித்தார் கமல்நாத்.

கமல்நாத் பிடிவாதம்
அடுத்து மாநில காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்கும் என நினைத்தார். அதையும் தந்துவிடக் கூடாது என்பதில் படுபிடிவாதம் காட்டினார் கமல்நாத். இதனால் மிகவும் கடுப்பான சிந்தியா, ராஜ்யசபா சீட்டாவது கிடைக்கும் என கனவு கண்டார். அதற்கும் கமல்நாத் டெல்லியில் சித்து வேலைகள் காட்டி வேட்டு வைத்தார்.

பாஜகவில் ஐக்கியம்
இதனால் வெறுத்துப் போய் காங்கிரஸில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டார். முன்னதாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரையும் சிந்தியா சந்தித்து பேசினார். இதனால் அவர் பாஜகவில் இணைவது உறுதியாகிவிட்டது. சிந்தியா காங்கிரஸில் இருந்து வெளியேறிய உடனே அவருக்கு ஆதரவாக 22 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.

எம்.எல்.ஏக்கள் ஜெய்ப்பூருக்கு மாற்றம்
இத்தனை களேபரங்கள் நடந்தும் காங்கிரஸ் மேலிடம் எதுவும் செய்யாமலேயே இருந்தது. சிந்தியாவை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்த பின்னரே ஆஹா, ஆட்சி பறிபோகப் போகிறதோ என்கிற பதற்றத்தில் அதாவது திடீரென முழித்துக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் மூத்த தலைவர்கள் கேசி வேணுகோபால், ஹரீஷ் ராவத் ஆகியோருடன் நேற்று சோனியா ஆலோசனை நடத்தினார். பின், போபாலில் இருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாதுகாப்பதற்காக அக்கட்சி ஆளும் ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு எம்.எல்.ஏக்களை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

போபாலில் மேலிட தலைவர்கள்
மேலும் சஞ்சய்சிங் வர்மா, கோவிந்த்சிங் ஆகிய தலைவர்களை பெங்களூருக்கு அனுப்பி வைத்துள்ளது காங். மேலிடம். பெங்களூருவில் முகாமிட்டுள்ள 19 அதிருப்தி எம்.எல்.ஏக்களை சந்தித்து அவர்களில் சிலரையாவது ராஜினாமாவை வாபஸ் பெற வைத்துவிடலாம் என்பது இவர்களுக்கான அஜெண்டா. மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் வாஸ்னிக், மூத்த தலைவர் ஹரீஷ் ராவத், மபி மேலிட பொறுப்பாளர் தீபக் பபாரியா ஆகியோர் போபாலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், ஜெய்ப்பூருக்கு செல்வதற்கு முன்னதாக அவர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு சில வாக்குறுதிகளும் தரப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
குறட்டை விட்டா கோட்டை(யை)விட்டுத்தான் ஆகனும்!
-
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
மேகதாதுவால் வெடித்தது அடுத்த போர்! கதி கலங்கி நிற்கும் காங்கிரஸ்.. டெல்லி வரை போன மேட்டர்! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி











Click it and Unblock the Notifications