மத்திய அரசின் அவசர சட்டங்கள் தொடர்பான காங். நிலைப்பாட்டை உருவாக்க ப.சிதம்பரம் உள்ளிட்ட ஐவர் குழு!
டெல்லி: மத்திய அரசின் அவசர சட்டங்கள் தொடர்பான காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை உருவாக்குவதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
மத்திய அரசை காங்கிரஸ் கட்சி பல்வேறு பிரச்சனைகளில் மிகக் கடுமையாக எதிர்க்கிறது. அதேநேரத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் பல்வேறு சட்டங்களுக்கு காங்கிரஸும் முழு ஆதரவை தெரிவித்து நிறைவேற்ற உதவுகிறது.

காங்கிரஸ் கட்சியின் இத்தகைய இரட்டை நிலைப்பாடு அந்த கட்சிக்குள்ளேயே பெரும் புகைச்சலையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து மத்திய அரசின் அவசர சட்டங்கள் குறித்த காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை உருவாக்குவதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் ஒரு குழுவை இடைக்கால தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார்.
இந்த குழுவில், ப. சிதம்பரம், திக்விஜய்சிங், அமர்சிங், கவுரவ் கோகாய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.













Click it and Unblock the Notifications