இந்தியா -சீனா மோதல் குறித்து 2013ல் மோடி போட்ட ட்விட்.. அதே கேள்வி.. திருப்பி தாக்கும் காங்கிரஸ்
டெல்லி: கிழக்கு லடாக்கில் இந்திய ராணுவத்தினர் சொந்த மண்ணைவிட்டு வெளியேறுவது ஏன் என பிரதமர் மோடி கடந்த 2013ம் ஆண்டு எழுப்பிய கேள்வியை இப்போது மீண்டும் அவருக்கே காங்கிரஸ் எழுப்பி உள்ளது.
Recommended Video
கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் (எல்ஏசி) பதற்றத்தை தணிக்க இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் கால்வான் பகுதியில் இருந்து வெளியேறுகின்றனர்.
இந்நிலையில் , சீன படைகள் வெளியேறுவது ஒகே.ஆனால் இந்திய ராணுவ வீரர்கள் சொந்த நிலத்தில் இருந்து வெளியேறுவது ஏன் என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி கேட்டு எழுப்பிய பழைய ட்வீட்டை காங்கிரஸ் இப்போது தோண்டி எடுத்து அவருக்கு கேள்வி எழுப்பி உள்ளது.

மோடியின் ட்விட்
2013 ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, நரேந்திர மோடி இந்த கேள்வியை எழுப்பி இருந்தார். இதற்கான பதிலை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, பிரதமர் மோடியிடம் கேட்டுள்ளார்.
|
ஏன் படைகள் பின்வாங்குகின்றன
இது தொடர்பாக சுர்ஜேவாலா வெளியிட்ட ட்வீட் பதிவில். "மரியாதைக்குரிய பிரதமர் அவர்களே, உங்கள் வார்த்தைகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? உங்கள் வார்த்தைகளுக்கு என்ன அர்த்தமா? எங்கள் (இந்திய) படைகள் ஏன் எங்கள் நிலத்திலிருந்து பின்வாங்குகின்றன என்று நீங்கள் பதில் கூறுவீர்களா? நாடு பதில்களைத் தேடுகிறது" என்று கூறியுள்ளார்.

மோடிக்கு ஆதரவு
காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூரும் பிரதமர் மோடியின் பழைய ட்விட்டை எடுத்து ரீடுவிட் செய்து, பிரதமர் மோடியின் அன்றைய கேள்வியை இன்றைக்கு நான் ஆதரிக்கிறேன். என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் இறையாண்மை
முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வெளியிட்ட ட்விட் பதிவில். "தேசிய நலன் முக்கியமானது. அதைப் பாதுகாப்பதே இந்திய அரசின் கடமை. எனவே ஏன் இந்தியாவின் நிலை குறித்து வலியுறுத்தப்படவில்லை? எல்லையில் நம்முடைய 20 நிராயுதபாணியான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த சீனா ஏன் அனுமதிக்கப்படுகிறது? கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவின் இறையாண்மையைப் பற்றி ஏன் குறிப்பிடப்படவில்லை? " என்று கேள்வி கேட்டிருந்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications