இப்படியுமா? அதிகார வரம்பு தெரியாதா? தமிழ்நாடு ஆளுநர் ரவியை டிஸ்மிஸ் செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்!
டெல்லி: தமக்கான அதிகார வரம்பு தெரியாமல் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக ஜனாதிபதி திரவுபதி முர்மு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென நேற்று இரவு அறிக்கை மூலம் அறிவித்தார். செந்தில் பாலாஜி மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன; அமலாக்கப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்; இதனால் ஏற்கனவே இலாகா இல்லாத அமைச்சராகத்தான் செந்தில் பாலாஜி இருந்து வருகிறார். ஆனால் எந்த ஒரு ஆலோசனையும் இல்லாமல் திடீரென செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக ஆளுநர் ரவி அறிவித்தது மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சில மணிநேரங்களிலேயே தமது டிஸ்மிஸ் அறிக்கையை நிறுத்தி வைப்பதாகவும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆளுநர் ரவியின் இந்த குழப்பமான நடவடிக்கை நாடு தழுவிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு மாநிலத்தில் ஆளுநருக்கான அதிகாரம் எது என்பதை உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் தெள்ள தெளிவாக கூறிய பின்னரும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த செயல்பாடு கடுமையான கண்டனத்தை எதிர்கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி எம்.பி. கூறுகையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உடனடியாக ஆளுநர் ஆர்.என்.ரவியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமக்கான அதிகார வரம்பு எது என்பது தெரியவில்லை. ஒரு ஆளுநர் என்பவர் இத்தகைய அரசியல் சாசன விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளவே கூடாது. இப்படியான நடவடிக்கைகள் மூலம் அரசியல் சாசனம் தமக்கு என்ன அதிகாரம் கொடுத்துள்ளது என்பதை அறியாமல்தான் ஆளுநராக இருக்கிறார் ரவி என்பது தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது என கூறியுள்ளார்.
திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், ஆளுநருக்கு அமைச்சரை நீக்குகிற அதிகாரம் எதுவும் இல்லை. மாநில முதல்வரின் அறிவுறுத்தல் இல்லாமல் அமைச்சரவையில் எந்த ஒரு மாற்றத்தையும் ஆளுநரால் செய்ய முடியாது. அரசியல் சாசனத்தை மீறி ஆளுநர் செயல்படுகிறார். ஒருவர் மீது வழக்குகள் இருப்பதாலேயே அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்துவிடவும் முடியாது என கூறியுள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று (29.6.2023) ஓர் அரசமைப்புச் சட்ட விரோத ஆணையை சிறிதும் முன்யோசனையின்றி, 'ஆத்திரக்காரருக்கு அறிவு மட்டு' என்ற பழமொழிக்கொப்ப, அமைச்சர் செந்தில்பாலாஜியை ''டிஸ்மிஸ்'' செய்வதாக வெளியிட்டார். அதே ஆணையை 5 மணிநேரத்தில் திரும்பப் பெற்றார். இது அவர் எப்படி தனது பதவி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்பதற்கான அதிகாரப்பூர்வ ஆவண சாட்சியம் ஆகும். இப்படி அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு, தி.மு.க. ஆட்சியின்மீது வன்மத்துடன் நடந்துகொண்டு வரும் இந்த ஆளுநர் தனது பதவியை இராஜினாமா செய்து வெளியேறவேண்டும். ஜனநாயகத் தத்துவப்படி இந்த ஆளுநரை 'டிஸ்மிஸ்' செய்ய முன்வரவேண்டும் குடியரசுத் தலைவர். அவரை ஆளுநராக அனுப்பியவர்களும், இதற்கான தார்மீகப் பொறுப்பேற்க முன்வரவேண்டும்! 13 மசோதாக்களை நிறுத்தி வைத்தும், நாளும் ஆளும் கட்சியின் கொள்கைகளை எதிர்த்தும் ஒரு போட்டி அரசு நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிகளும், மக்களும் திரண்டு, ''ஆளுநரை டிஸ்மிஸ் செய்'' என்ற ஒற்றைக் கோரிக்கையை - பிரச்சாரத்தை எங்கெங்கும் அடைமழையாகப் பொழிய வைக்கவேண்டியது, ஜனநாயகக் காப்புக் கடமையாகும் என கூறியுள்ளார்.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications