80 தொகுதிகளிலும் தனித்தே போட்டி.. உ.பி.யில் காங்கிரஸ் பரபர அறிவிப்பு
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தேர்தல் மேலிட பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் எதிர் எதிர் துருவங்களாக இருந்த மாயாவதியும் அகிலேஷ் யாதவும் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க போவதாக நேற்று அறிவித்துள்ளனர். மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் இருவரும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவது என்ற முடிவுக்கு வந்தனர்.

போட்டியில்லை
ரே பரேலி, அமேதி ஆகிய இரு தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு விட்டு கொடுப்பதாக இருவரும் தெரிவித்துவிட்டனர். எனவே அந்த தொகுதிகளில் அந்த இரு கட்சியினரும் போட்டியிடவில்லை.

அதிர்ச்சி
இதுவரை காங்கிரஸ் ஆதரவு வைத்திருந்த நிலையில் இரு கட்சிகளும் தனியாக கூட்டணி அமைத்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் தலைவர்
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் இன்று லக்னோவில் கூடுகிறது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர், தேர்தல் மேலிட பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தனித்து போட்டி ஏன்
இந்த கூட்டத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 மக்களவை தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடியாததால் அகிலேஷும் மாயாவதியும் தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளதாகவே கூறப்படுகிறது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications